நவராத்திரி பெருவிழாவை முன்னிட்டு 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் தனலட்சுமி அலங்காரம்!
வேலூர் சத்துவாச்சாரி பிராமணர் வீதியில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பர்வத வர்தினி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில், நவராத்திரி பெருவிழாவின் ஆறாம் நாளான இன்று உற்சவருக்கு,ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான 500, 200, 100, 50 ஆகிய ரூபாய் நோட்டுகளால் தனலட்சுமி அலங்காரம் பிரம்மாண்டமாக செய்யப்பட்டிருந்தது.
சிவ வாத்தியங்கள் முழங்க உற்சவருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தனலட்சுமி உற்சவரை வணங்கி சென்றனர்.