நவராத்திரியை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் ஆராதனை நடைபெற்றது.
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் நவராத்திரி முன்னிட்டு இன்று ஸ்ரீ பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காட்டப்பட்டது, தொடர்ந்து தஞ்சை பெரிய கோவிலில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.
பெருவுடையாருக்கு அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றது இதனை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மழை காரணமாக நந்தி மண்டபத்தில் நடக்கவிருந்த நாட்டிய நிகழ்ச்சி நடராஜர் மண்டபத்தில் மாணவ மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி மற்றும் குச்சிப்புடி உள்ளிட்ட நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.