1. முல்லை இலை – அறம் வளரும்
2. கரிசலாங்கண்ணி இலை – இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள் சேரும்.
3. வில்வம் இலை – இன்பம். விரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.
4. அருகம்புல் – அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும். 21 அருகம் புற்களைக் கொண்டு அர்ச்சிப்பது அதி விசேடமானது
5. இலந்தை இலை – கல்வியில் மேன்மையை அடையலாம்.
6. ஊமத்தை இலை – பெருந்தன்மை கைவரப்பெறும்.
7. வன்னி இலை – பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கப்பெறும்.
8. நாயுருவி – முகப் பொலிவும், அழகும் கூடும்.
9. கண்டங்கத்தரி – வீரமும், தைரியமும் கிடைக்கப்பெறும்.
10. அரளி இலை – எந்த முயற்சியிலும் வெற்றி கிட்டும்.
11. எருக்கம் இலை – கருவிலுள்ள சிசுவுக்கு பாதுகாப்புக் கிட்டும்.
12. மருதம் இலை – மகப்பேறு கிட்டும்.
13. விஷ்ணுகிராந்தி இலை – நுண்ணிவு கைவரப்பெறும்.
14. மாதுளை இலை – பெரும் புகழும், நற்பெயரும் கிட்டும்.
15. தேவதாரு இலை – எதையும் தாங்கும் மனோ தைரியம் கிட்டும்.
16. மருக்கொழுந்து இலை – இல்லற சுகம் கிடைக்கப்பெறும்.
17. அரசம் இலை – உயர்பதவியும், பதவியால் கீர்த்தியும் கிட்டும்.
18. ஜாதிமல்லி இலை – சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கப்பெறும்.
19. தாழம் இலை – செல்வச் செழிப்புக் கிடைக்கப்பெறும்.
20. அகத்தி இலை – கடன் தொல்லையிலிருந்து விடுதலைக் கிடைக்கும்.
21. தவனம் பூவின் இலை -: நல்ல கணவன் மனைவி அமையப்பெறும்