ஞாயிறு கருட தரிசனம் – நோய் அகலும்
நோய் அகலும், மனக்குழப்பம் நீங்கும். பாவங்கள் நீங்கும்.
திங்கள் கருட தரிசனம் – குடும்ப நலம் பெருகும்.
செவ்வாய் கருட தரிசனம் – தைரியம் கூடும்.
புதன் கருட தரிசனம் – எதிரிகள் இல்லா நிலை உருவாகும்.
வெள்ளி கருட தரிசனம் – பணவரவு கிட்டும்
சனி கருட தரிசனம் – நற்கதி அடையலாம்.
கருடாழ்வாரை தரிசிக்கும்போது கூறி வணங்க வேண்டிய மந்திரம்
குங்குமாங்கித வர்ணாய குந்தேந்து தவளாய ச !
விஷ்ணு வாஹ !
நமஸ்துப்யம் பக்ஷி ராஜாயதே நம:
என கூறி வணங்க வேண்டும். பெரிய திருவடி என வைஷ்ணவர்களால் போற்றப்படும் கருடாழ்வார் பிறந்தது ஆடி மாதம் ஸ்வாதி நக்ஷத்திரத்தன்றுதான். இந்தத் திருநாளில் கருட தரிசனம் செய்வதாலும், கருடனை வழிபடுவதாலும் சகல தோஷங்களும் நீங்கும். மாங்கல்யம் பலம் பெறும்.