திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த வியாழக்கிழமை காலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை 44 ஆயிரத்து 574 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
புதன்கிழமை காலை 3 மணி முதல் இரவு 12 மணிவரை 70,028 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் செலுத்தப்பட்ட காணிக்கைகளை வியாழக்கிழமை எண்ணப்பட்டது. இதில் 4.50 கோடி ரூபாய் பக்தர்கள் உண்டியலில் செலுத்தி உள்ளனர்.
மாலை 6 மணி நிலவரப்படி இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வைகுண்டத்தில் உள்ள 31 அறைகளும் நிரம்பி கோகுலம் பக்தர்கள் ஓய்வு அறை வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருப்பதால் தரிசனத்திற்கு 24 மணி நேரம்
ரூபாய் 300 டிக்கெட் ஆன்லைன் மூலம் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்திற்குள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்
ஆதார் அடையாள அட்டையின் மூலமாக சர்வ தரிசனம் டிக்கெட் பெற்ற பக்தர்கள் மற்றும் மலைப் பாதையில் பாதயாத்திரையாக வந்து திவ்ய தரிசனம் டிக்கெட் பெற்ற பக்தர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் அனுமதிக்கப்பட்டு 5 மணி நேரத்திற்குள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்