ஏற்றம் தரும் ராகு பெயர்ச்சி – ஞானம் தரும் கேது பெயர்ச்சி

ஏற்றம் தரும் ராகு பெயர்ச்சி – ஞானம் தரும் கேது பெயர்ச்சி

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் MCA., MBA., MA

Mobile/WhatsApp: +91 7845119542

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ விளம்பி வருஷம் உத்தராயனம் சிசிரரிது மாசி மாதம் 01ம் தேதி – 13.02.2019 சுக்லபக்ஷ நவமி – கிருத்திகை நக்ஷத்ரம் – புதன்கிழமை – மாஹேந்திர நாமயோகம் – பாலவ கரணம் – அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 18.29க்கு (உதயாதி பகல் மணி 02.02க்கு) மிதுன லக்னத்தில் ராகு பகவான் கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் பிரவேசிக்கிறார். 

நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ விளம்பி வருஷம் உத்தராயனம் சிசிரரிது மாசி மாதம் 01ம் தேதி – 13.02.2019 சுக்லபக்ஷ நவமி – கிருத்திகை நக்ஷத்ரம் – புதன்கிழமை – மாஹேந்திர நாமயோகம் – பாலவ கரணம் – அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 18.29க்கு (உதயாதி பகல் மணி 02.02க்கு) மிதுன லக்னத்தில் கேது பகவான் மகர ராசியில் இருந்து தனுசு ராசிக்குள் பிரவேசிக்கிறார். 

ராகு கேது – ஓர் அறிமுகம்:
ராகு – கேதுக்கள் சகோதரர்களாவார்கள். ராகுவும் கேதுவும் சாயா கிரகங்கள் என்று அழைக்கப்படும். ஆனால் மற்ற கிரகங்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு இந்த கிரகங்களுக்கு உண்டு. எந்த வீட்டில் இருக்கிறார்களோ அவர்களது ஆதிபத்தியத்தை இந்த கிரகங்கள் நமக்குக் கொடுப்பார்கள். உதாரணமாக ஜெனன கால ஜாதகத்தில் மேஷ ராசியில் ராகு இருக்கிறார் என்றால் அவர் மேஷ ராசியின் அதிபதியாகிய செவ்வாயின் ஆதிபத்தியத்தை எடுத்துக் கொள்வார். 

அறிவியல் பூர்வமாக நமது DNAதான் நம்மைப் பற்றியும் நமது முன்னோர்களைப் பற்றியும் சொல்லும் விஷயமாகும். ராகு – கேது என்னும் கிரகங்கள் DNA போலதான். ராகுவை வைத்து தகப்பானார் வழிகளையும் – கேதுவை வைத்து தாயார் வழிகளையும் புரிந்து கொள்ள இயலும். எனவே தான் ராகு தந்தை வழி காரகன் என்றும் கேதுவை தாய் வழி காரகன் என்றும் சொல்கின்றனர். 

ராகு கேதுக்களை வைத்துதான் தார தோஷம்- களத்திர தோஷம் – பிதுர் தோஷம் – புத்திர தோஷம் போன்றவற்றை சொல்ல முடியும்.
கல்வி – ஞானம் – திருமணம் – மக்கட்பேறு – வேலை – வெளிநாடு சம்பாத்தியம் – கர்மா போன்ற நமது வாழ்வின் இன்றியமையாத காரகங்களுக்கு ராகு கேது முக்கியமானவர்களாகும்.

பொது பலன்கள்:
பொதுவில் உலகளவில் அரசு சார்ந்த விஷயங்களில் சிறிது பிரச்சனைகள் தலைதூக்கலாம். உத்திர நக்ஷத்ரத்தில் ராகுவும் – பூரட்டாதி நக்ஷத்ரத்தில் கேதுவும் சஞ்சாரம் செய்கிறார்கள். ராகுவினுடைய அம்சம் என்பது குருவினுடைய நக்ஷத்ரம் – புதன் ராசியில் சஞ்சரிக்கிறார். கேது சூரியனுடைய நக்ஷத்ரம் – குருவின் ராசியில் இருக்கிறார். அரசாங்கம் ஒவ்வொரு முடிவையும் தவறாக எடுப்பதும் அதற்கு பரிகாரமாக மேல் மட்டத்தில் இருக்கும் அதிகாரிகள் அதை சரி செய்வதுமாக இருக்கும். ராகுவினுடைய மாற்றம் புதன் வீட்டில் இருக்கிறது.

சனியின் பார்வை ராகுவின் மீது விழுகிறது. நாடுகளுக்குள் மோதல்கள் வரலாம். இவ்வருடம் வெப்பம் அதிகமாக இருக்கும். பணநடமாட்டம் சீராக இருக்கும். கல்வி சார்ந்த விஷயங்களில் தொய்வு ஏற்படும். அதே வேளையில் குருவின் வீட்டில் கேது சாரம் இருப்பதன் மூலம் ஆன்மீகம் மிக அதிகமான வளர்ச்சி காணும். பூமி நிலம் சம்பந்தாமான பிரச்சனைகள் அதிகமாவதும் அதை தீர்க்க நீதிமன்றத்தை நாடுவதும் அதிகமாகும். அறுவை சிகிச்சை சம்பந்தமான புதிய கண்டுபிடிப்பு உருவாகும்.

அதே வேளையில் கேதுவிற்கு முதல் கேந்திரத்தில் சனி பகவான் இருக்கிறார். ஆன்மீகம் – கோவில் சம்பந்தமான பிரச்சனைகளில் சிறிது சுணக்கம் ஏற்படும். ராகு – கேது சஞ்சாரம் செய்யும் இடங்களால் கலப்புத் திருமணங்கள் அதிகமாகும். நிலம் – நீர் – காற்று – ஆகாயம் – நெருப்பு என பஞ்சபூதங்கள் மூலமாகவும் மக்களுக்கு பிரச்சனைகள் ஏற்படும். தற்கொலைகள் அதிகமாகும். 

பொது பரிகாரம்:
ராகுவும் கேதுவும் நாகம் சம்பந்தமான கிரகங்கள் என்பதால் அடிக்கடி நாகதேவதையை வணங்குவது நல்லது.

ராகுவிற்கு ஸ்ரீதுர்க்கை அம்சமுள்ள அம்மனையும் – கேதுவிற்கு வினாயகர் – ஆஞ்சநேயரையும் வணங்குவது நன்மை தரும்.

பெயர்ச்சியால் நன்மை அடையும் ராசிகள்:
மேஷம் – மிதுனம் – கடகம் – சிம்மம் – கன்னி – துலாம் – தனுசு – மகரம்

பெயர்ச்சியால் பரிகாரத்தின் மூலம் நன்மை அடையும் ராசிகள்:
ரிஷபம் – விருச்சிகம் – கும்பம் – மீனம்