devi-aradahanai

நறுமணமுள்ள பலவகை மலர்களால் தேவியை பூஜிப்பவர் கைலாய வாசம் அடைவர்.

வில்வ இலைகளால் தேவியை பூஜிப்பவர் இம்மையிலும் மறுமையிலும் சுகமாக வாழ்வர்.

ரத்தின ஆபரணங்களைச் சமர்ப்பித்து ஆராதிப்பவன் குபேரன் ஆவார்.

பால் அபிஷேகம் செய்பவர் ஒரு கல்ப காலத்திற்கு பாற்கடலில் வாழ்வர்.

பட்டு ஆடைகளை சமர்ப்பிப்பவர் வாயு உலகில் வசிப்பர்.

லட்சுமி, சரஸ்வதி தேவிக்கு மாம்பழச்சாறு அபிஷேகம் செய்தால் நித்தியத்துவம் கிடைக்கும்.

திராட்சைச்சாறு கொண்டு மகேஸ்வரிக்குப் பூஜை செய்தால், தேவியின் உலகில் தன் குடும்பத்துடன் வாழ்வர்.

கற்பூரம், அகில், கஸ்தூரி, குங்குமப்பூ, சந்தனத்தை தேவிக்கு அபிஷேகம் செய்தால் பல பிறவிகளில் செய்த பாவம் தொலையும்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *