2018-03-05-04-35-28

பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில், மாசி கொடை விழா, கொடியேற்றத்துடன் துவங்கியது.கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு, கேரள பெண்கள், விரதமிருந்து இருமுடி கட்டு ஏந்தி வருவர்.கடலில் குளித்து, அம்மனை வழிபடுவ தால், இது பெண்களின் சபரிமலை என, அழைக்கப்படுகிறது.இங்கு, மாசி கொடை விழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. மேல்சாந்தி, சட்டநாதன் குருக்கள் கொடியேற்றினார்.தொடர்ந்து, தீபாராதனை நடைபெற்றது.௯ம் தேதி இரவு, பெரிய படுக்கை பூஜையும், 12ம் தேதி இரவு, பெரிய சக்கர தீவட்டி ஊர்வலமும் நடக்கிறது. 12ம் தேதி நள்ளிரவு, ஒடுக்கு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *