மாசிமகத்தை முன்னிட்டு கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. 108 திவ்ய மங்களப் பொருள்களால் அலங்காரம் செய்யபட்டு சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. சாரங்கபாணி கோயிலில் இந்த ஆண்டு மாசிமக விழா கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. 108 திவ்ய மங்களப் பொருள்களால் அலங்காரம் செய்யப்பட்ட தேரை ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து இழுத்தனர். இந்தத் தேரில் சாரங்கபாணி உற்சவர் அலங்கரிக்கப்பட்டு ஏற்பட்டதோடு அவருக்கு தீபாராதனை காட்டப்பட்ட பிறகு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.