2018-02-18-11-32-25

கும்பகோணத்தில் சோழர் காலத்தில கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்கது பெரியநாயகி சமேத நாகேஸ்வர சுவாமி கோயில். கோயிலில் சூரியன் தனது ஒளிமங்கி அமாவாசை சந்திரனை போல கலங்கி நின்ற போது அசரிரீயின் கூற்றுப்படி சூரிய தீர்த்ததை உண்டாக்கி அதில் நீராடி நாகேஸ்வரரை வழிபட்டதால் சாபம் நீங்கப் பெற்றார். அது முதல் ஆண்டுதோறும் சித்திரை 11,12,13 ஆகிய தேதிகளில் சூரியன் தன் கதிர்களை இறைவன் மீது படரச்செய்து பூஜிக்கும் காட்சி கண்கொள்ள காட்சியாகும். இதுவே சூரிய பூஜையாகும். ஆண்டுக்கு குறிப்பிட்ட 3 தினங்களில் மட்டும் சூரிய ஒளிகதிர்கள் மூலஸ்தானம் வரை சென்று சிவலிங்கம் மீது விழும் வகையில் கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சூரியனுக்கு ஒளி கொடுத்ததால் கும்பகோணம் நகருக்கு பாஸ்கர சேத்திரம் என பெயரும் ஏற்பட்டது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *