2018-02-17-11-45-19

நவகிரக நாயகர்களில் செவ்வாய் மிகவும் வலிமை மிக்கவர். சகோதரர் பூமி யோகம், தேக நலம், ஆகிய பலங்களைத் தருபவராக இருக்கிறார். செவ்வாய் தோசத்தால் திருமணத் தடை உண்டாகும் என்பர். இதனைப் போக்கும் தலமாக விளங்குகிறது வைத்தீஸ்வரன் கோயில். செவ்வாய் வழிபட்ட சிவலிங்கம் இங்கு அமைந்துள்ளது. செவ்வாயின் அதிதேவதையான மிருகப்பெருமான் முத்துக்குமாரசுவாமி என்ற பெயரில் இங்கு வீற்றிருக்கிறார். செவ்வாய்க் கிழமைகளில் செவ்வாய் தனக்குரிய ஆட்டு வாகனத்தில் கோயிலுக்குள்ளே உலா வருகிறார். இங்கு தன்வந்திரி சித்தர் ஜீவ சமாதி ஆகி இருப்பதால் நோய் தீர்க்கும் தலமாகப் போற்றப்படுகிறது. இத்தல இறைவனை வைத்தீஸ்வரரையும், அம்பிகை தையல் நாயகியையும் விரதம் இருந்து வழிபாடு செய்வோருக்கு திருமணத் தடை நீங்கி நல்ல வாழ்க்கை அமையும்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *