2017-11-19-14-30-21

சபரிமலையில் பார்கோடுடன் கூடிய இருமுடிக்கான பை விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்தாண்டு மண்டல பூஜைக்கான திருவிழா கடந்த 16ஆம் தேதி தொடங்கியதையடுத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துவருகின்றனர். விடுமுறை நாளான இன்று அதிகாலையிலேயே இருமுடி கட்டி வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரண்டனர். பலமணி நேரம் வரிசையில் காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர்.
வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் போக, சன்னிதானத்தில் விரதமிருந்து இருமுடி கட்டும் ஐயப்ப பக்தர்களும் உள்ளனர். அவர்களது வசதிக்காக தேவசம் போர்டு அனுமதியோடு பார்கோடுடன் கூடிய இருமுடி பைகள் சன்னிதானத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த பையில் இடம்பெற்றுள்ள பார்கோடை மொபைல் போனில் ஸ்கேன் செய்தால் பூஜைகள் நடக்கும் நேரம், நடை திறக்கும் நேரம் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் மொபைல்போன் திரையில் காட்டும். இந்த முயற்சி பக்தர்களுக்கு பலன்கொடுக்கும் என்று தேவசம் போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *