deepavali-kondadattam-yen

 

 

 ஒளியின் சிறப்பை உணர்த்துவது தீபாவளி தீபங்களின் வரிசை என்பதே  தீபாவளி,வெளியுலகத்திலுள்ள இருள் மட்டுமில்லாமல்,மனதில் இருக்கும் தீமை என்னும் அக இருளும் நீங்க தீபாவளி வழி காட்டுகிறது.
புத்தாடை,பலகாரம்,பட்டாசு,உறவினர்களைச் சந்திப்பது என வெறும் கொண்டாட்ட நாளாக மட்டுமில்லாமல்,தன்னைப் போல பிறரை நேசிக்கும் அன்பு மனம் நமக்கு வேண்டும்  என்பதை உணர்த்துகிறது. எளியவர்களுக்கு இயன்ற உதவி செய்யும் நன்னாளாக அமைகிறது.

 

தீபாவளி உணர்த்துவது

 இரண்டு பேருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்பவர் தரசு போல இருக்க வேண்டும் என்று சொல்வார்கள்.நியாத்தின் குறியீடான தராசை துலாக்கோல் என்பர்.தீபாவளி மாதமான ஐப்பசிக்கு துலா மாதம் என்று அழைக்கப்படுவார்கள். வேண்டியவர்,வேண்டாதவர் என்ற பாகுபாடு இல்லாமல் தராசு போல நடப்பவனே நீதிமான்.உயிர்களை துன்புருத்திய நரகாசுரனை, பெற்ற பிள்ளை என்ற குறுகிய எண்ணத்துடன் திருமாலும்,சத்தியபாமாவும் ஆதரிக்கவில்லை.அவனைக் கொன்று உலக உயிர்களை காப்பாற்றினர். நீதி உணர்வும்,மன உறுதியும் வேண்டும் என்பதே தீபாவளி.

வடமாநிலங்களில் தீபாவளி,பாசமலர் திருவிழாவாக நடக்கிறது. இதில் எமனுக்கு முக்கியத்துவம் அளிக்கபடுகிறது. எமனின் தங்கை யமுனை(நதி).அவளுக்கு தீபாவளியன்று அண்ணன் பரிசளிக்க வருவதாகவும்,அதற்கு நன்றியாக யமுனை விருந்து படைப்பதாகவும் சொல்வர்.இதன்படி வடமாநிலங்களில் சகோதரிகளுக்கு,சகோதரர்கள் பரிசு அளிப்பர். அதற்கு நன்றிகடனாக,சகோதரிகள் விருந்து வைப்பர்.

 

இரவில் பெண்கள்,தீபங்களை ஆற்றில் மிதக்க விடுவர். தீபம் அணையாமல் நீண்ட நேரம் மிதந்தால் ஆண்டு முழுவதும் சுபிட்சுமாக இருக்கும் என நம்புகின்றனர். அது மட்டுமில்லாமல்  தொழில்,வியாபாரத்தில் லாபம் கிடைக்க வேண்டும் என்பதற்காக வடமாநிலங்களில்  தீபாவளியன்று லட்சுமியை வழிபடுவர். வீடு முழுவதும் மாலை நேரத்தில் வரிசையாக தீபமேற்றுவர்.தீபலக்ஷ்மியாக திருமகள் வாசம் செய்வதாக ஐதிகம்.

அம்ர்தசரஸ் பொற்கோயிலில் சீக்கியர்கள் லட்சக்கணக்கில் தீபங்களை ஏற்றி கொண்டாடுவது கண்கொள்ளக் காட்சியாக அமைந்திருக்கும். உத்திரபிரதேசத்தில் விவசாயிகள் தீபாவளியன்று கோவர்த்தன விரதம் இருப்பர். இதனால் கால்நடைவளர்ப்பு,விவசாயத்தில் லாபம் பெருகும் என நம்புகின்றனர்.

தீபவளியன்று சதுர்த்தசி நாளில் மாத சிவராத்திரி விரதமிருப்பர்.ஐப்பசி மாத தேய்பிறை சதுர்த்தசியில் இரவில் விழித்து நரகசுரனுடன் போரிட்டு வென்றார் கிருஷ்ணர். இதனால் இந்நாளுக்கு நரக சதுர்த்தசி என்றும் பெயர்.சிவராத்திரி சிவனுக்குரியது என்றாலும்,ஐப்பசியில் பெருமாளுக்கும் உரியது.கிருஷ்ணர்,சிவன் இருவரையும் வழிபட ஏற்ற நாள் தீபாவளி ஆகும்.

 

தீபாவளி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக விளக்கேற்றுவது வழக்கம். தீபாவளியன்று லட்சுமி தேவி தங்கள் வீடுகளுக்கு வருவதாக ஐதீகம் அவரை வரவேற்கும் விதத்தில் வண்ண விளக்குகளால் வீடுகளை அலங்கரிக்கிறார்கள். லட்சுமி வருவாள் என்ற ஐதீகம் இருக்கிறது. வீட்டினை சுத்தமாகி எல்லாரும் சுத்தமாக குளித்து வெளிச்சமாக விளக்கினை ஏற்றி வைத்தால் தங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் வரும் என்று சொல்லப்படுகிறது. காலப்போக்கில் அது பல நிறங்களை அள்ளித் தெளிக்கும் பட்டாசாக உருமாற்றம் பெற்றது.

இந்த உலகத்தில் ஆணுக்குப் பெண் சரிசமம் என்ற உண்மையை முதன்முதலில் உணர்த்தியவர் சிவ பெருமான்.அதற்காக அவர் தனது உடலில் சரிபாதியை பார்வதி தேவிக்கு தந்து அருளினார்.சிவனிடம் பாகம் வேண்டி பார்வதி தேவி இருந்த விரதமே கேதார கவுரி விரதம்,  இந்த விரதத்தை மேற்கொண்டு சிவனின் உடலில் பாதியானாள்,இந்நாளை தான் தீபாவளியாக கொண்டாடிகிறார்கள்.

தீபாவளியன்று லட்சுமி குபரே பூஜை செய்து வழிப்பட்டால்,மகாலட்சுமி குபேரரை ஒரு சேர தரிசித்தால் செல்வவளம் உண்டாகும்.

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *