ragu-thosham-nivarththi-tharum-kovil-ethu

ராகு  பகவானுக்கு உரியதலம்  தமிழகத்தில் உள்ள திருநாகேஸ்வரம் கோவில் தான் அனைவருக்கும் நினைவுக்கு  வருவது. அதே போன்று ராகு  தோஷம் நிவர்த்தி தரும் கோவில் நெல்லையில் உள்ள பாளையங்கோட்டையில் உள்ள பகவதி அம்மன் கோவில் ஆகும். திருநாகேஸ்வரத்தில் இருந்து கொண்டுவரப்பட சக்தி வாய்ந்த ராகு யந்திரமும் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

 இந்த கோவிலில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ராகு கால வேளையில் ராகு தோஷம் நிவர்த்தியாகிட சிறப்பு அபிஷேகங்கள்,வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.  ராகு பகவானுக்கு அபிஷேகம் செய்த பொருளை நோயில் இருந்து நிவாரணம் பெற வேண்டியும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் பக்தர்கள் அருந்துகின்றனர்.

 இக்கோவிலில் பக்தர்களே நாம் கொண்டு போகும் அபிஷேக பொருட்களை கொண்டு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்யப்படுகிறார்கள். அதனுடன் பிரசாதத்தை ராகு பகவானுக்கு படைத்து பின்னர் தங்களுடைய கைகளாலேயே பக்தர்களுக்கு விநியோகம் செய்கின்றனர்.

 ராகு பகவானுக்கு உரிய அதிதேவதையான ,துர்க்கையின் அம்சமான கருமாரி அம்மன் இத்தலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பதால் விரைவாக  தோஷங்கள் எல்லாம் நிவர்த்தியாகும். அதனால்  இத்தலத்திற்கு வந்து ராகு பகவானை வழிபட்டால்  திருநாகேஸ்வரம் சென்று ராகு பகவானை வழிபட்ட பலனை  அடையலாம். ராகுவால் உண்டாகும் தோஷங்கள் நீங்கி நன்மை பெற  ஏராளமான பக்தர்கள் இத்தலத்திற்கு வந்து வழிப்பட்டு செல்கிறார்கள்.

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *