2017-10-05-09-58-41

தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டு திருத்தலங்கல் முப்பத்திரண்டாகும். அவற்றில் இருபத்திரண்டாவது தலமாக விளங்குவதும், திரு ஞானசம்பந்தரால் பாடப் பெற்ற திருத்தலமாக விளங்குவதே சென்னையில் ‘‘பாடி‘‘ என அழைக்கப்படும் திருவலிதாயம் ஆகும். திருவலிதாய நாதரையும் தாயம்மையை வழிபடுவோருக்கு தீவிணைகள், துயரம் நீங்கி ஈசனின் திருவடியை வணங்கினால் முக்தி அடைவது நிச்சயம். பரத்வாஜர், மேனகையின் சாபத்தால் கருங்குருவியாக உருமாறினார். அந்த சாபத்தை போக்க சாபவிமோச்சனம் பெறுவதற்காக இங்கு வந்து சிவனை வழிபட்டு சுய உருவம் பெற்றார், குருபகவான் சாபம் நிவர்த்தி செய்ய சிவனை நினைத்து பூஜை செய்து சாப விமோச்சனம் பெற்றார். ஆலங்குடி, திருச்செந்தூர், தென்குடிதிட்டை போன்ற சிவஸ்தலங்களுக்கு இணையான தலம் இது.

சூரியன், ராமர், அனுமன், இந்திரன், வாயு, ஆகியோர் இங்கு வந்து பூஜை செய்து, சிவனை வழிபட்டு சென்றனர். திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர், ராமலிங்க அடிகளார், பாம்பன் ஸ்வாமிகள் ஆகியோர் போற்றிப்பாடப்பட்ட திருத்தலங்களில் ஒன்றாக உள்ளது. கோயிலின் உள்ளே சிவன், அம்மாள், வலம்புரி விநாயகர், சூரியன், நால்வர், அருணகிரிநாதர், பாலமுருகன், கோஷ்ட விநாயகர், தட்சணாமூர்த்தி, சோமாஸ்கந்தர், வரசித்தி விநாயகர், முருகன் வள்ளி. தெய்வானை, மகாவிஷ்னு, அனுமன் பூஜித்த லிங்கம், மீனாட்சி சுந்தரேஸ்வரர், துர்கை, நடராஜர், பைரவர், நந்தி, பலிபீடம், கொடிமரம், என தனித்தனியே பிரகாரங்கள் உள்ளது. பாடி ஈசன் கோயில் இருபத்திரண்டாவது குருஸ்தலம். சிவன் கற்பறஷ்டக விமானத்தில் அருள்பாலிக்கிறார். சன்னதிக்கு எதிரில் நாககோணம், அஷ்டதிக் பாலர்கள், அஷ்டலஷ்மி, உள்ளது, இதை தரிசனம் செய்வது மிகவும் சிறப்பு. சித்திரை பௌர்ணமியில் 10 நாட்கள் பிரம்மோற்சவ திருவிழா நடக்கும், ஐப்பசி மாதத்தில் அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், சிவாரத்திரி, பிரதோஷம் போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கும்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *