பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தர்களுக்கு இலவச பஞ்சாமிர்தம் வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே, காணொலி காட்சி மூலமாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பழநி முருகன் கோயிலில் இலவச பஞ்சாமிர்தம் வழங்கும் திட்டத்தை இன்று காலை தொடங்கினார்.
இந்த திட்டத்தின்படி, கோயிலுக்கு வரும் சுமார் 2 ஆயிரம் பக்தர்களுக்கு தொன்னையில் 20 கிராம் பஞ்சாமிர்தம் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.