2017-04-12-14-48-50

திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் ஆலயத்தில் மகாசுதர்சன ஹோமம் நடைபெற்றது. வேதவிற்பன்னர்களைக் கொண்டு உலக நன்மைக்காகவும் மக்கள் மகிழ்ச்சியுற வேண்டி காலை முதல் வேள்வி தொடங்கப்பட்டு நடைபெற்றது.
இந்த ஹோமத்தில் கலந்துக்கொள்வதால் ஏவல், பகைமை, வாழ்வில் செழிமை, நன்மக்கள் பேறு, நோயின்மை ஆகியவை பெற்று வளமுடன் வாழலாம் என்பதால் திரளான பொதுமக்கள் ஹோமத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து உலகநன்மைக்காக 1008பாராயணம் நடைபெற்றது. பின்னர் சுதர்சன பெருமாளுக்கு பூஜிக்கப்பட்ட கலங்களை விற்பன்னர்கள் ஊர்வலமாக கொண்டு சென்று பின்னர் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் திரளானோர் கலந்துக்கொண்டு வழிபாடு செய்தனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *