2017-04-08-17-15-52

பொன்னேரி அருகே உள்ள திருப்பாலீஸ்வரர் கோயிலில் பங்குனி மாத தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பொன்னேரியை அடுத்த திருப்பாலைவனத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த லோகாம்பிகை உடனுறை திருப்பாலீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலின் பங்குனி மாத பிரம்மோற்சவம் கடந்த மாதம் 31-ஆம் தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து, உற்சவ மூர்த்திகள் மாடவீதியில் தினமும் வலம் வந்தனர்.
விழாவின் 8-ஆம் நாளான வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
பின்னர், உற்சவ மூர்த்தியான திருப்பாலீஸ்வரர் தேரில் எழுந்தருளினார். இதையடுத்து, பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாட வீதிகள் வழியாக சென்ற தேர், மாலையில், நிலையை அடைந்தது. இதில், திருப்பாலைவனம், அதனைச் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *