2017-04-05-13-32-56

ராணிப்பேட்டையை அடுத்த கிருஷ்ணாபுரம் திரெளபதி அம்மன் கோயிலில் அக்னி வசந்த விழாவையொட்டி, அர்சுனன் தபசு மரம் ஏறுதல் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது .
வேலூர் மாவட்டம், வாலாஜா வட்டம், மருதம்பாக்கம் மதுரா கிருஷ்ணாபுரம் கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் நிகழாண்டு அக்னி வசந்த விழா மார்ச் 13-ஆம் தேதி சிகாரக் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து 18 நாள்கள் மகாபாரதச் சொற்பொழிவும்,
11 நாள்கள் கட்டைக் கூத்து நாடகமும் நடைபெற்று வருகின்றன.
விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை காலை திருவலம் சர்வமங்களா பீடம் சாந்தா சுவாமிகள் பங்கேற்று அக்னி வசந்த விழா நடத்துவதன் நோக்கம் குறித்த சொற்பொழிவு நிகழ்த்தினார். இதைத் தொடர்ந்து, அர்சுனன் தபசு மரம் ஏறுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *