2017-04-02-12-56-23

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அதிகாரநந்தி சேவை வருகிற ஏப்ரல் 4ஆம் தேதி, வெள்ளி ரிஷப வாகன காட்சி ஏப்ரல் 6, 63 நாயன்மார்களுக்கு காட்சி தேர் திருவிழா வருகிற ஏப்ரல் 8, 63 நாயன்மார்களோடு காட்சியளிக்கும் விழா ஏப்ரல் 9ஆம் தேதியும் நடைபெறவிருக்கிறது.

இதைத் தொடர்ந்து அன்றைய இரவு சந்திரசேகரர் பார்வேட்டை விழாவும், ஐந்திருமேனிகள் விழாவும் நடைபெறவிருக்கிறது. ஏப்ரல் 10ஆம் தேதி துவங்கி அடுத்தடுத்த நாட்களில் திருக்கல்யாணம் அம்சமாக பிச்சாண்டார் மற்றும் ஐந்திருமேனிகள் விழாவும், புன்னை மரத்தடியில் உமாதேவியார் மயிலுருவுடன் மாதேவரை வழிபடல், திருக்கல்யாண உற்சவம் மற்றும் உமா மகேஷ்வர் தரிசனம், பந்தம் பறி விழாவுடன் ஏப்ரல் 13ஆம் தேதியுடன் விழா நிறைவடைகிறது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *