14

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை நடை திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடந்தோறும் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடத்தப்படும். இந்த வருட பங்குனி உத்திர திருவிழா நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்கி ஏப்ரல் 9ம் தேதி ஆறாட்டுடன் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 9ம் தேதி வரை தினமும் பூஜைகள் நடைபெறும். ஏப்ரல் 9ம் தேதி இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும். சித்திரை விஷு தினத்திற்காக மறுநாள் மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும். ஏப்ரல் 14ம் தேதி சித்திரை விஷு சிறப்பு பூஜைகள் நடைபெறும். விஷு கனி தரிசனமும் நடைபெறும். அதன்பின் ஏப்ரல் 18ம் தேதி இரவு 10 மணியளவில் கோயில் நடை சாத்தப்படும்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *