2017-03-30-17-00-01

திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் சூரியன் ஈசனை வணங்கும் காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த அதிசயம் இரண்டு நாட்களுக்கு நிகழும். சூரிய உதயத்தின் போது அதன் கதிர்கள் ஈசன் மேல் விழுந்து ஜோதி ஸ்வரூபமாய் காட்சி அளித்திடும்.
திருப்பட்டூர் கோவில் பிரம்மபுரீஸ்வரர் கோவில் சென்று வழிபட்டால் உங்கள் பிரச்சனை எல்லாம் கண்டிப்பாக குறையும் ஏன் என்றால் அங்கு சிவபெருமான் பிரம்மனுக்கு வரம் கொடுத்த இடம் எதற்கு வரம் கொடுத்தார் சிவபெருமான் என்றால் அதாவது மனிதன் பிறக்கும் போது அவனுக்கு எப்படி வாழ்க்கை இருக்க வேண்டும் என்று பிரம்மன் நம்முடைய தலையெழுத்தை எழுதி விடுகிறார் அதன் பிறகு அவனுக்கு வரும் துன்பம் எதுவாக இருந்தாலும் அதை போக்க திருச்சி அருகே உள்ள சிருகனூர் அருகில் இருக்கும் திருப்பட்டூர் பிரம்ம புரீஸ்வரர் கோவில் சென்று அங்கு நம்முடைய ஜாதகம் வைத்து அர்ச்சனை பிரம்மனுக்கு செய்து வந்தால் துன்பம் எல்லாம் கண்டிப்பாக குறையும் .
முதலில் திருப்பட்டூர் அதாவது திருச்சி டு சென்னை பைபாஸ் ரோடில் சமயபுரம் கோவில் இருந்து சுமார் 15 கி . மீ . சென்றால் இடதுபுறத்தில் 5 கி மி. சென்றால் திருப்பட்டூர் ஊர் வரும் அங்கு தான் இந்த கோவில் அமைந்துள்ளது .
முதலில் சிவன் கோவிலில் இருந்து 1.5 கி.மி தூரத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் சென்று அங்கு உள்ள வியக்ரபாரதர் ஜீவா சமாதியை வணங்கி சிறிது தியானம் செய்து பின்பு சிவன் மற்றும் பார்வதியை தரிசனம் செய்து பின்பு அங்கு இருந்து பிரம்மபுரீஸ்வரர் கோவில் வர வேண்டும் .

அதன் பின்பு சிவன் கோவில் சென்று முதலில் சிவனை மனம் உருகி பிரார்த்தனை செய்ய வேண்டும் அதன் பிறகு பிரம்மனுக்கு அர்ச்சனை தட்டு வாங்கி அதன் உடன் உங்களது ஜாதகத்தையும் சேர்த்து அய்யர் இடம் கொடுத்து உங்கள் பெயர் சொல்லி அர்ச்சனை செய்து தரும் படி கொடுக்கவும் அவர் உங்கள் ஜாதகத்தை பிரம்மன் மடியில் வைத்து அர்ச்சனை செய்து பின்பு உங்களிடம் கொடுப்பார். பின்பு அங்கு இருக்கும் பதஞ்சலி முனிவர் உள்ள ஜீவ சமாதி சென்று மனம் உருக பிரார்த்தனை செய்து கொஞ்ச நேரம் தியானம் செய்து பின்பு அங்கு உள்ள அம்பாள் வழிபட்டு பின்பு அங்கு உள்ள சிவலிங்கம் எல்லாவற்றையும் கும்பிட்டு வரவும் .
அப்புறம் உங்கள் குறைகள் எல்லாம் கண்டிப்பாக கதிரவன் கண்ட பனி போல் கொஞ்சம் கொஞ்சம்மாக குறையும் அதை நீங்கள் கண்டிப்பாக உணரலாம்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *