2017-03-26-15-25-41

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில், நடிகர் ராகவா லாரன்ஸ் தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.
சனிக்கிழமை பிற்பகல் கோயிலுக்கு வந்த அவர் ஸ்ரீசம்பந்த விநாயகர், ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சன்னதிகளில் தரிசனம் செய்தார். பின்னர், கோயில் நவக்கிரக சன்னதியில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டார். நடிகர் ராகவா லாரன்ஸýடன் அவரது தாய், தம்பி உள்பட உறவினர்கள் சிலரும் வந்திருந்தனர்.
கோயில் நிர்வாகம் சார்பில் ராகவா லாரன்ஸýக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. சுவாமி தரிசனம் முடிந்து அவர் புறப்பட்டுச் சென்றார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *