2017-03-24-10-35-53

திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோயில் பங்குனி பிரமோற்சவ விழா புதன்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவள்ளூர் பஜார் வீதியில் திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாத பிரமோற்சவம் 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான பங்குனி பிரமோற்சவ விழா புதன்கிழமை காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து, காலை 7 மணிக்கு தங்க சப்பரத்தில் உற்சவர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இரவு சிம்ம வாகன வீதியுலா நடைபெற்றது. இரண்டாம் நாளான வியாழக்கிழமை அம்ச வாகனத்தில் பக்தர்களுக்கு உற்சவர் அருள்பாலித்தார்.
பிரம்மோற்சவத்தின் அனைத்து நாள்களிலும் காலை, மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் உற்சவர் வீதியுலா நடைபெறும்.
ஏழாம் நாளான வரும் 28-ஆம் தேதி காலை தேர்த் திருவிழாவும், மாறுநாள் திருக்கல்யாணமும் நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *