2017-03-16-10-15-31

சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. திருப்பரங்குன்றம் கோயிலில் மார்ச் 4ல் துவங்கிய பங்குனித் திருவிழாவில், மார்ச் 15 ஆம் தேதி சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடந்தது. மதியம் 3:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை பச்சை குதிரை வாகனத்தில் எழுந்தருளி, கிரிவீதியில் பச்சை குதிரை ஓட்டம் நடந்தது. பச்சை குதிரைக்கு களி கொடுக்கும் நிகழ்ச்சி முடிந்து, சுப்பிரமணிய சுவாமிக்கு பரிவட்டம் கட்டப்பட்டது. தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு கோயில் ஆறுகால் பீடத்தில் தங்க குடத்தில் புனிதநீர் நிரப்பி பூஜைகள் நடந்தது. பட்டாபிஷேக அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளினர். கிரீடத்திற்கு புனித நீர் அபிஷேகம், தீபாராதனை முடிந்து, சுவாமியின் சிரசில் சாத்துப்படி செய்யப்பட்டது. சுவாமியின் கரத்தில் நவரத்தின செங்கோல், வெள்ளி சேவல் மற்றும் மயில் கொடிகள் சாத்துப்படியானது. தீபாராதனை முடிந்து சுவாமிக்கு பரிவட்டம் கட்டப்பட்டது.தொடர்ந்து மார்ச் 16 ஆம் தேதி மதியம் 12 முதல் 12:30 மணிக்குள் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *