2016-11-25-16-19-48

சில்லரை தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் சிரமத் துக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், சபரிமலை அய்யப்பன் கோயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக இ-உண்டி வசதி அறிமுகப்படுத் தப்பட்டுள்ளது.
மண்டல பூஜையை முன்னிட்டு கடந்த 15-ம் தேதி நடை சபரிமலை நடை திறக்கப்பட்டது. ஜனவரி 20-ம் தேதி இந்தாண்டின் மகர விளக்கு விழா நிறைவு பெறும்.
இந்த 3 மாதங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் விரத மிருந்து மாலையணிந்து, சபரி மலைக்கு வருவார்கள். கோயிலில் உண்டியல் காணிக்கையும் செலுத்துவார்கள்.
இந்நிலையில் ரூபாய் நோட்டுகளுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதில் சிரமம் ஏற்படும் சூழல் நிலவுகிறது.
இதனைக் கருத்தில்கொண்டு சபரிமலை அய்யப்பன் கோயிலில் மின்னணு முறையில் காணிக்கை செலுத்துவதற்கான இ-உண்டி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
‘‘டெபிட் கார்டுகள் மூலம் காணிக்கை செலுத்த எந்த வரம்பும் இல்லை. கிரெடிட் கார்டு மூலம் ஒரு கோடி ரூபாய் கூட, பக்தர்கள் செலுத்தலாம். மின்னணு முறையில் காணிக்கை பெறும் திட்டம், லட்சக்கணக்கான பக்தர்களுக்குப் பயன்படும். விரைவில் மற்ற இடங்களிலும் இவ்வசதி செய்யப்படும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *