2016-11-24-03-19-34

சபரிமலை மாளிகைப்புரம் மஞ்சமாதா கோயிலில் நடன பகவதி சேவை வழிபாடு நடைபெற்றது.நடன பகவதி சேவை வழிபாட்டை மேல்சாந்தி மனுகுமார்நம்பூதிரி நடத்தினார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. தரிசனம், நெய் அபிஷேகத்துக்கு 5 மணிநேரம் ஆனது. பெரும்பாலும் பக்தர்கள் நள்ளிரவு பம்பை வந்தடைகின்றனர். இவர்கள் பம்பை நதியில் புனிதநீராடி பம்பா கணபதி கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தி நீலிமலையேற்றம், அப்பாச்சிமேடு, சபரிபீடம் சென்று வரிசையில் சரங்குத்தி வழியாக சபரிமலையை அடைகின்றனர். வழிநெடுகிலும் பாதுகாப்பு அதிகாரிகள் 24 மணிநேரமும் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *