2016-11-05-17-00-13

ஆன்லைன் மூலம் தரிசன டிக்கெட்டுகள் மற்றும் தங்கு அறைகளை முன்பதிவு செய்வதற்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் தேவஸ்தானம் பல்வேறு திட்டங்கள் செயல்பட்டு வருகிறது. அந்த வரிசையில் ஆன்லைன் மூலம் சுவாமி தரிசனம், தங்கும் அறைகள் முன்பதிவு ஆகியவற்றுக்காக ஆதார் அட்டை கட்டாய மாக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை இல்லாமல் நேரடியாக திருமலைக்கு வரும் பக்தர்கள் அரசு சார்பில் வழங்கப்பட்ட ஏதேனும் ஒரு ஆவணத்தைக் காண்பிக்கலாம்.
ஆன்லைன் முன்பதிவின் போது பக்தர்களின் புகைப்படம் இணைக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் முதியோர், மாற்று திறனாளி பக்தர்கள் தரிசனம் முடித்து வெளியே வந்ததும், அவர்களது உதவிக்காக பேட்டரி கார்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல வெள்ளி வாசல் முதல் தங்க வாசல் வரை ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஆலோசித்து வருவதாகவும் விரைவில் கூட்டநெரிசலை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *