2016-10-31-14-12-52

திருத்தணி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா தொடங்கியது வரும் நவம்பர் 6-ம் தேதி வரை 7 நாட்களுக்கு வெகு விமரிசையாக சஷ்டி விழா நடைபெற உள்ளது.

இதில், தினந்தோறும் காலை புஷ்பம், பட்டு, தங்கக் கவசம், திரு வாபரணம், வெள்ளி மற்றும் சந்த னக் காப்பு ஆகிய அலங்காரங் களில் சுப்ரமணிய சுவாமி அருள் பாலிக்க உள்ளார். மாலையில் ஆன்மிக சொற்பொழிவு, இன்னிசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.

திருவிழாவின் இறுதி நாளான நவ.6-ம் தேதி காலை 11 மணியளவில் திருக்கல்யாணம் நடைபெறும். இன்று முதல் நவ.5-ம் தேதி வரை உற்சவரான சண்முகருக்கு லட்சார்ச்சனையும், நவ.5-ம் தேதி மாலை 5 மணியளவில் புஷ்பாஞ்சலியும் நடைபெற உள்ளது. நவம்பர் 5-ம் தேதி வரை இருவேளைகளில் தேவார பாராயணம் நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *