2016-10-09-12-14-47

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி விழாவில் ஸ்ரீரங்கநாச்சியார் திருவடி சேவை நடைபெற்றது.
108 வைணவ திருத்தலங்களில் முதல் திருத்தலமாக விளங்குவது ஸ்ரீரங்கம் கோயில். இந்தக் கோயிலில் புரட்டாசி மாதம் நடைபெறும் நவராத்திரி விழா சிறப்புமிக்க ஒன்று. ஆண்டு முழுவதும் இந்தக் கோயிலில் திருவிழா நடைபெற்றாலும், இந்த நாளில் மட்டும்தான் ரங்கநாயகித் தாயாரின் திருவடியை பக்தர்கள் தரிசிக்க முடியும்.
நவராத்திரி ஏழாம் நாளான சனிக்கிழமை மாலை 4 மணிக்கு ஸ்ரீரங்கநாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து திருவடி சேவையுடன் புறப்பட்டு கொலுமண்டபத்தில் எழுந்தருளினார்.
தாயாரின் திருவடிசேவை தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். இதைத் தொடர்ந்து, ஸ்ரீரங்கநாச்சியார் கொலு மண்டபத்திலிருந்து புறப்பட்டு மூலஸ்தானம் சென்றடைந்தார். தொடர்ந்து தயார் திருவடி சேவையை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *