2016-10-08-11-37-22

சபரிமலை கோயில் மேல்சாந்தி பதவிக்கு வரும் 17-ம் தேதி குலுக்கல் நடைபெறுகிறது.
கேரளாவில் பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில், மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு திருவிழாக்கள் விரைவில் தொடங்கவுள்ளன. இதற்காக கோயிலின் புதிய மேல்சாந்தி தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயில் மேல்சாந்தி பதவிக்கு 15 பேரும், மாளிகைபுரத்தமன் கோயில் மேல்சாந்தி பதவிக்கு 11 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் ஒருவர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார். வரும் 17-ம் தேதி காலை இத்தேர்வு நடைபெற உள்ளது. திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர், கண்டரரு ராஜீவரரு ஆகியோர் முன்னிலையில் மேல்சாந்தி தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *