2016-10-01-15-23-33

நவராத்திரி பண்டிகை அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்குகிறது. கோவில்களில் 9 நாட்களும் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மங்கையர் போற்றும் நவராத்திரி விரதம் 9 நாட்கள் அனுஷ்டிக்கப்படுகிறது. முப்பெரும் தேவியர்களான துர்கா, மகாலட்சுமி, சரஸ்வதி ஆகியோரை போற்றி, வணங்குவதே இந்த நாளின் சிறப்பாகும். வீடுகளில் 9 நாட்களும் கொலு வைத்தும் பக்தர்கள் சிறப்பிப்பார்கள். நவராத்திரி நாளான 9 இரவுகள் தனி சக்தியாக விளங்கும் ஜகன்மாதா, பத்தாம் நாளன்று ஈசுவரனை வணங்கி ‘சிவசக்தி’யான அர்த்தநாரீசுவரராக மாறுகிறாள் என்பதே இந்த விழாவின் புராண வரலாறு.

இந்த 9 நாட்களிலும் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி தேவியரை 9 அவதாரங்களாக அலங்கரித்து, போற்றி பூஜித்து வழிபடுதல் வேண்டும். புரட்டாசி அமாவாசை அன்றிருந்தே விரதம் பூண்டு தேவி மீது பக்தி சிரத்தையுடன் நவராத்திரி வழிபாட்டை தொடங்க வேண்டும்.

அத்தனை ஜீவராசிகளிலும் அம்பிகை கொலுவிருக்கிறாள் என்பதை உணர்த்துவதற்காகவே கொலு வைக்கப்படுகிறது. கொலுவை முறையாக ஒன்பது, ஏழு, ஐந்து என ஒற்றைப்படை வரிசையில் 9 படிகளில் பொம்மைகளை வைக்க வேண்டும். கொலுவுக்கு வரும் பக்தர்களுக்கு மங்களப் பொருட்களான மஞ்சள் குங்குமம் கொடுத்து உபசரிக்க வேண்டும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழா அக்டோபர் 2 ஆம் தேதி தொடங்கி, 11-ந் தேதி வரை நடைபெறுகிறது. நவராத்திரியையொட்டி கோவில்களிலும் 9 நாட்களும் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. சில கோவில்களில் 11 நாட்கள் வரை கொண்டாடப்படுகிறது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *