2016-09-22-10-41-15

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு கடந்த ஒரு மாதத்தில் சுமார் 61 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது.

சிவனின் அக்னி தலமாக விலங்குகிறது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில் மாதந்தோறும் உண்டியல் காணிக்கை எண்ணப்படுகிறது. அதன்படி, செப்டம்பர் மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.
100-க்கும் மேற்பட்ட கோயில் ஊழியர்கள், பக்தர்கள், தன்னார்வலர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
கோயிலில் உள்ள நிரந்தர உண்டியல்கள், கிரிவலப்பாதை அஷ்டலிங்க சந்நிதிகளில் இருந்த உண்டியல்கள், துர்க்கையம்மன் கோயில் உண்டியல்களில் இருந்த காணிக்கைகள் எண்ணப்பட்டன.
இதில், 60 லட்சத்து 97 ஆயிரத்து 597 ரூபாய் ரொக்கம், 220 கிராம் தங்கம், 640 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக அளித்திருந்தது தெரியவந்தது.

காணிக்கையாக கிடைத்த ரொக்கப் பணம் கோயில் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. தங்கம், வெள்ளி நகைகள் கோயில் பொக்கிஷ அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *