2016-09-18-11-18-27

பக்தர்களின் வசதிக்காக திருமலை ஏழுமலையான் கோவிலில், இரண்டாவது உண்டியலை திருப்பதி தேவஸ்தானம் அமைத்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
நாள் ஒன்றுக்கு 3 கோடி ரூபாய் வரை உண்டியலில் காணிக்கையாக கிடைக்கிறது.
உண்டியல் மூலம் ஆண்டுக்கு, 1,000 கோடி ரூபாய்; 300 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகள் கிடைக்கின்றன. பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும் போது, உண்டியலில் காணிக்கை செலுத்த வெகுநேரம் காத்திருக்க நேரிடுகிறது.எனவே கூட்ட நெரிசலை தவிர்க்க பக்தர்களின் வசதிக்ககாக கோவிலுக்குள் மற்றொரு உண்டியலை ஏற்படுத்த, ஆகம பண்டிதர்களிடம் தேவஸ்தானம் ஆலோசனை கேட்டது. அதற்கு, அவர்கள் அனுமதி வழங்கியதால், தற்போது உள்ள உண்டியல் அருகே, இரண்டாவது புதிய உண்டியலை தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *