ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் திருபவித்ர உற்சவம்

ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசயனர் சன்னிதியில் செப்டம்பர் 13ஆம் தேதி முதல் திருபவித்ர உற்சவம் நடக்கிறது. இன்று துவங்கும் இந்த உற்சவம் ஏழு நாட்கள் நடக்கும். இந்த விழாவை தொடர்ந்து, 19ந்தேதி கருடசேவை நடக்கிறது.
இதையொட்டி செப்டம்பர் 13 ஆம் தேதி மாலை 4 மணிக்கு வேதபிரான் பட்டர் அனந்தராமகிருஷ்ணன் திருமாளிகையிலிருந்து மஞ்சள்நுால் மாலைகள் வடபத்ரசயனர் சன்னிதிக்கு கொண்டு வரபட்டு, ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார் மற்றும் ஆழ்வார்கள், ஆச்சார்யர்களுக்கு அணிவிக்கபட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.
தொடர்ந்து தினமும் மாலை 4 மணிக்குமேல் பெரியபெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் எழுந்தருளி, நவகலச பூஜை செய்யப்படுகிறது. 19ந்தேதி கருடசேவையும் நடக்கிறது.