2016-09-09-04-56-37

திருநள்ளாறு கோயிலில் புதிதாக தயாரிக்கப்பட்ட இந்திர விமானத்தில், சனீஸ்வரருக்கான சப்பரத்தின் வெள்ளோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலில் உள்ள பழைமையான இந்திர விமானம் காரைக்கால் உள்ளிட்ட பிற பகுதிகளில் உள்ள கோயில்களில் நடைபெறும் திருவிழாவின்போது சுவாமி வீதியுலாவுக்காக பயன்படுத்தப்படுகிறது. இதனால், திருநள்ளாறு கோயிலுக்கென்று தனியாக இந்திர விமானம் தயார் செய்ய முடிவு செய்யப்பட்டது. நன்கொடை மூலம் ரூ.11 லட்சத்தில் புதிதாக இந்திர விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் வெள்ளோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
புதிய இந்திர விமானம் தரைமட்டத்திலிருந்து 15 அடி உயரம், 6.5 அடி அகலத்தில் பர்மா தேக்கு மரத்தால் தயார் செய்யப்பட்டுள்ளது. இதன் எடை 3.5 டன் ஆகும். மேலும், கோயில் நிர்வாகத்தின் செலவில் பெல் நிறுவனத்தின் மூலம் ஸ்ரீ சனீஸ்வர பகவான் வீதியுலாவுக்கென இரும்பால் சப்பரம் தயாரிக்கப்பட்டுள்ளது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *