2016-09-07-11-27-13

திருப்பதியில் அக்டோபர் 3ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை பிரம்மோற்சவமும், 7-ந் தேதி கருட சேவையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் நவராத்திரியின் போது பிரம்மோற்சவ விழா கொண்டாடப்படும்.
இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா அக்டோபர் 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 11-ந் தேதி வரை நடைபெறுகிறது. 3-ந்தேதி மாலை 4 மணிக்கு பெரிய சேஷ வாகனத்தில் சாமி வீதி உலா நடக்கிறது.
4-ந்தேதி காலை சின்ன சேஷ வாகனமும், இரவு அன்ன பறவை வாகனமும், 5-ந்தேதி காலை சிம்ம வாகனம், இரவு முத்து பந்தல், 6-ந் தேதி கல்ப விருட்சம் வாகனமும், இரவு சர்வபூபாள வாகனம்.
7-ந்தேதி காலை மோகினி அவதாரம் நடக்கிறது. அன்று மாலை 4 மணிக்கு கருட சேவையும் நடக்கிறது.
8-ந் தேதி அனுமந்தம் வாகனம், மாலையில் தங்க ரதம், இரவு யானை வாகனமும், 9-ந் தேதி காலை சூர்யபிரபை, மாலை சந்திர பிரபை, 10-ந் தேதி காலை தேரோட்டமும் நடக்கிறது.
கடைசி நாளான 11-ந் தேதி காலை தீர்த்தவாரியும், மாலையில் கொடி இறக்கமும், இரவு தங்க பல்லக்கில் சாமி வீதி உலாவும் நடக்கிறது.
மாட வீதிகளில் பல்வேறு வாகனங்களில் மலையப்ப சுவாமி, உபய நாச்சியார்களுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகளை திருப்பதி தேவஸ்தானம் தீவிரமாக செய்து வருகிறது

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *