2016-08-31-11-42-43

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆவணித்திருவிழா பத்தாம் நாளில் தேரோட்டம் நடைபெற்றது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலையில் சுவாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர். பத்தாம் நாளான புதன் கிழமை காலை தேர்திருவிழா நடைபெற்றது.

திருக்கோவில் தக்கார் ப.தா.கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் தா.வரதராஜன் உள்ளிட்டோர் வடம்பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.
பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் வடம் பிடிக்க காலை 6.05 மணிக்கு பிள்ளையார் ரதம் புறப்பட்டு நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்து காலை 6.35 மணிக்கு நிலைக்கு வந்தது.

தொடர்ந்து காலை 6.40 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் சுவாமி குமரவிடங்கப்பெருமான் பெரிய தேரில் புறப்பட்டு, வீதி உலா வந்து காலை 7.35 மணிக்கு நிலைக்கு வந்தது.
அதன்பின்னர் காலை 7.45 மணிக்கு அம்மன் தேர் திருவீதி வலம் வந்து 8.10 மணிக்கு நிலையினை சேர்ந்தது. தேரோட்ட நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *