65-66

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயிலில் ஜூலை மாதத்துக்கான உண்டியல் காணிக்கையாக ரூ. 65.66 லட்சம் கிடைத்துள்ளது.

வைணவத் தலங்களில் முதன்மை தலமாக போற்றப்படுவது ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயில். இங்குள்ள நம்பெருமாளை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக கோயிலில் பல்வேறு சன்னதிகளில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த காணிக்கைகள் மாதம்தோறும் எண்ணப்படுவது வழக்கம்.

கடந்த ஜூலை மாதம் பக்தர்கள் செலுத்திய காணிக்கை கோயிலில் உள்ள கருடாழ்வார் சன்னதி அருகே கோயில் இணை ஆணையர் பொன். ஜெயராமன் முன்னிலையில் எண்ணப்பட்டன.

இதில் ரொக்கமாக ரூ. 65 லட்சத்து 66 ஆயிரத்து 108ம், தங்கம் 125 கிராமும், வெள்ளி 1,135 கிராமும், வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் 229-ம் இருந்தன. இது கடந்த மாதம் கிடைத்த காணிக்கையைவிட ரூ. 11 லட்சம் அதிகமாகும்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *