2016-08-27-15-53-35

ரியோ ஒலிம்பிக்கில் பாட்மிண்டன் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை பி.விசிந்து. இவர் ஐதராபாத் சிம்மவாஹினி மகாகாளி கோயிலுக்கு சென்று அவர் நேர்த்திக் கடன் செலுத்தினார்.
பாவாடை தாவணி உடையணிந்து வந்த சிந்து, பயபக்தியுடன் வேண்டுதல் பொருள்களைத் தலையில் வைத்து சுமந்து சென்று சாமி தரிசனம் செய்தார். அவருடைய பெற்றோரும் உடன் வந்தார்கள். சிந்துவின் வருகையால் கோயில் வளாகத்தில் ரசிகர்கள் பெருமளவில் கூடினார்கள்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றால் மீண்டும் வருவதாக வேண்டிக்கொண்டேன். அதனையொட்டி இப்போது கோயிலுக்கு வந்து நேர்த்திகடன் செலுத்தியதாகவும் சிந்து தெரிவித்தார். கடவுளின் அருள் வேண்டும் என்று வேண்டினேன். அதேபோல அனைவரின் நலனுக்காகவும் வேண்டினேன். என்றார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *