2016-08-23-15-04-47

சிதம்பரம் நடராஜருக்கு 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள நவரத்தினம் பதித்த தங்கக் கிரீடமும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு ஒட்டியானம் ஆகியவற்றை சென்னை சேர்ந்த பக்தர் ஒருவர் வழங்கினர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உலக நன்மை மற்றும் உலக அமைதி வேண்டி லட்ச ருத்ர பாராயணம் மற்றும் கோடி அர்ச்சனை ஜூலை 28-ம் தேதி  முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 15-ம் தேதி வரை நடைபெறும் இந்தநிகழ்ச்சியின் நிறைவு நாளில் மகாபிஷேகமும், லட்ச ஆவர்த்தி சம்மேளன சகஸ்ர நாம ஹோமம் மற்றும் ருத்ர ஆவர்த்தி ஹோமம் நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு சென்னையைச் சேர்ந்த பக்தர் காயத்திரி ராமகிருஷ்ணன் குடும்பத்தினர் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு நவரத்தினம் பதித்த தங்கக்கிரீடமும், சிவகாமிசுந்தரி அம்பாளுக்கு தங்க ஒட்டியானமும் செய்து திங்கள்கிழமை  கோயில் பொதுதீட்சிதர்களின் செயலாளரிடம் வழங்கினர். இதன் மதிப்பு ரூ.25 லட்சமாகும். நடராஜருக்கு நவரத்தினம் பதித்த தங்கக்கிரீடமும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு ஒட்டியானமும் சிறப்பு ஆராதனைக்கு பிறகு திங்கள்கிழமை பொதுதீட்சிதர்களால் பொருத்தப்பட்டது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *