2016-08-23-12-34-38

திருச்சி கல்லணை ரோடு சர்க்கார்பாளையத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் சூரியன் தன் ஒலியால் மூலவரை வழிபட்ட காட்சியை திரளான பக்தர்கள் தரிசித்தனர்.

திருவெறும்பூர் அருகே உள்ள சர்கார்பாளையத்தில் கரொகாலச் சோழனால் காவிரி தென்கரையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இங்கே ஆவணி ஏழு, எட்டு, மற்றும் ஒன்பதாம் தேதிகளில் சூரிய ஒளி முன் மண்டபம் வழியாக மெல்ல நகர்ந்து கொடிமரம் வழியாக மூலவரை வந்தடைகிறது.

இதன் மூலம் சூரிய பகவானே சிவபெருமானை தரிசிப்பதாக ஐதீகம். இந்த ஆண்டு இந்த சூரிய வழிபாடு இன்று காலை 6 முதல் 6.30 மணி வரை நடந்தது. அப்போது சூரிய ஒளி காசி விஸ்வநாதரின் நெற்றிப் பொட்டில் திலகம் இட்டது போல ஜொலித்தது காண்போரை பக்திப் பரவசம் கொள்ளச் செய்தது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *