2016-08-22-11-10-20

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோயிலில் உள்ள யோகநரசிம்மர், வரதராஜ சுவாமி உட்பட 5 சன்னதிகளுக்கு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாக உள்ளது திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில். இங்குள்ள யோகநரசிம்மர், வரதராஜசுவாமி, திருமழிசையாழ்வார், குளக்கரை ஆஞ்சநேயர் உட்பட 5 சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.

காலை 9 மணிக்கு பெருமாள், தாயாருடன் சன்னதியில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து விமானம் மற்றும் ராஜகோபுரத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தை ஒட்டி பக்தர்களின் பாதுகாப்புக்காக மாட வீதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *