16-60

காளஹஸ்தி சிவன் கோயிலில் காணிக்கை தலைமுடி 16 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.
காளஹஸ்தீஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள், தங்கள் தலைமுடியை காணிக்கையாகச் செலுத்தி வருகின்றனர். பக்தர்கள் செலுத்தும் தலை முடியைப் பாதுகாத்து ஆண்டுக்கு ஒருமுறை கோயில் நிர்வாகம் ஒப்பந்தப்புள்ளியுடன் கூடிய ஏலம் மூலம் விற்பனை செய்து வருகிறது.

அதன்படி கடந்த 1.4.2016 முதல் வரும் 31.3.2017 வரையிலான காலத்துக்கு உள்பட்ட தலைமுடி விற்பனைக்கான ஒப்பந்தப்புள்ளியுடன் கூடிய ஏலத்தை கோயில் நிர்வாகம் கடந்த சனிக்கிழமை நடத்தியது.

அதில் சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ரூ. 16.60 லட்சத்துக்கு ஏலம் எடுத்தது.
ஆனால் இது கடந்த ஆண்டை விட 17 லட்சம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு சுமார் 33 லட்ச ரூபாய்கு ஏலம் விடப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஏலத்தில் கலந்து கொண்ட அனைத்து நிறுவனங்களும் 16 லட்சத்துக்கு குறைவாகவே கேட்டிருந்தன. சென்னையை சேர்ந்த நிறுவனம் ஒன்று ரூ.16.60 லட்சத்துக்கு ஏலம் கேட்டிருந்ததால் அந்நிறுவனத்துக்கு டென்டர் வழங்கப்பட்டது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *