2016-08-09-12-04-35

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், ராஜகோபுரத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், கோபுரத்தில், 13 நிலைகளில் சேதமடைந்துள்ள படிகளை சீரமைக்க, இரும்பு தூண் பொருத்தும் பணி நடந்து வருகிறது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக பணி, 25 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருகிறது. இதில், 13 நிலைகளுடன், 217 அடி உயரமுள்ள ராஜகோபுரம், 86 லட்சம் ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்படுகிறது. பணியின் போது, ராஜகோபுரத்தில் மா அருணை விநாயகருக்கு எதிரே உள்ள, நான்காவது தூணில், மேற்கூரையில், பத்து டன் எடை கொண்ட பீமில், நான்கு அடி தூர விரிசல் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

கோபுரத்தில் விரிசல் அபாயகரமான இடத்தில் உள்ளதால், ‘ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்’ மூலம் ஒட்டி சீர் செய்ய வேண்டும் என பரிந்துரைத்துரைக்கப்பட்டது. மேலும் கோபுரத்தின், 13 நிலைகளிலும் ஏறி ஆய்வு செய்தபோது, அங்கு பொருத்தப்பட்டுள்ள தேக்கு மரத்திலான படி சேதமடைந்தது தெரிந்தது. இதையடுத்து, இந்த நிலைப்படியை மாற்றுவதற்கு பொருத்தப்பட வேண்டிய இரும்பு தூண், நேற்று கொண்டு வரப்பட்டது. இதை ஒவ்வொரு நிலைப்படியிலும் பொருத்தி, புதிய தேக்கு மரத்தால் ஆன நிலைப்படி பொருத்தப்பட உள்ளது. இதற்கான பணி துவங்கி நடந்து வருகிறது.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *