2016-08-08-17-02-03

திருப்பதியில் நன்கொடை அளிக்கும் பக்தர்களை தரிசனத்துக்கான ஏற்பபாடுகளை செய்து தர வேண்டும் என தேவஸ்தான அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் நன்கொடை பிரிவு அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் நன்கொடை வழங்கும் பக்தர்களிடம் இருந்து டிடி அல்லது செக் மூலம் நன்கொடை பெறவேண்டும் எனவும், வரும் காலங்களில் தகவல் தொழில்நுட்ப அடிப்படையில் நன்கொடை பெற அதற்கான மென்பொருளை உருவாக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு 48 மணி நேரத்தில் இ-பாஸ் புத்தகம் வழங்கவேண்டும். அவர்களுக்கு நன்கொடை பிரிவு அலுவலகத்தில் சலுகைகளை பெற வழிகாட்டவேண்டும். நன்கொடையாளர்களின் பட்டியலை தயாரித்து அவர்களுக்கு விவரங்கள் வழங்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

மேலும், நன்கொடையாளர்களுக்கு தரிசனம், தங்கும் அறைகள் ஏற்பாடு செய்து தரவேண்டும். அவர்களை சுவாமி சன்னதியில் அலையக்கூடாது என நன்கொடை பிரிவு தலைமை அதிகாரி அறிவுறுத்தினார்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *