28

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உலக நன்மை, அமைதி வேண்டி முதல்முறையாக லட்ச ருத்ர பாராயணம், கோடி அர்ச்சனை வருகிற 28ஆம் தேதி தொடங்குகிறது.

இந்த பாராயணம் செப்டம்பர் 15ஆம் தேதி வரை 50 நாள்கள் நடைபெறுகிறது. தினமும் காலை 9 மணி தொடங்கும் பாராயணம் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடைபெறும். இந்த பாராயணத்தில் 100 தீட்சிதர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும், 100 பேர் கோடி வில்வ அர்ச்சனை செய்ய உள்ளனர்.

நிறைவு நாளான செப்டம்பர் 15ஆம் தேதி லட்ச ஆவர்த்தி சம்மேளன சகஸ்ரநாம ஹோமம், ருத்ர ஆவர்த்தி ஹோமம் நடைபெறும். ஹோமத்துக்கு கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதா, காவிரி, சிந்து உள்ளிட்ட சப்த நதிகளிலிருந்தும் தீர்த்தங்கள் கொண்டு வரப்படும்.

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *