Tag: Tuesday

  • Tuesday Friday panam kodukkalama

    செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மற்றவர்களிடம் பணத்தை கொடுக்கக் கூடாது, செலவு செய்யக் கூடாது என்று முன்னோர்கள் கூறுவார்கள்.அவ்வாறு ஏன் கூறுகிறார்கள் என்பதற்கான அர்த்தம்.

    செவ்வாய் கிழமை முருகனுக்கும், வெள்ளிக் கிழமை லட்சுமிக்கும் உகந்த நாட்களாக கருதப்படுகிறது.நாம் வணங்கும் இந்த இரண்டு தெய்வங்களும் நமக்கு செல்வ வளத்தை கொடுப்பதுடன், அவைகள் நமது வீட்டில் நிரந்தரமாக இருப்பதற்கும் அருள்புரிகிறது.

    இதனால் நாம் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பணம் வைத்து இருக்கும் பெட்டியில் இருந்து பணத்தை எடுத்து செலவு செய்வதை தவிர்க்க வேண்டும்.மேலும் அத்தியாவசிய சில முக்கியமான செயல்பாடுகளை தவிர்த்து, அந்த இரண்டு கிழமைகளிலும் பணம் வைத்திருக்கும் பெட்டியை திறக்கவே கூடாதாம்.

    இல்லையெனில், நம்மிடம் இருக்கு அனைத்து செல்வ வளங்களும் நம்மை விட்டு சென்று விடும் என்பது ஒரு ஐதீகமாகும்.

    எனவே முடிந்தளவு, அதற்க்கு முந்தைய நாளோ அல்லது அதற்க்கு அடுத்த நாளோ செலவை தள்ளிப் போட்டுக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் பணப்பற்றாக்குறையினை தவிர்க்கலாம் என்பது நம்பிக்கை.
     

  • Tuesday do’s & dont’s

    செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டவோ, ஷேவிங் செய்யவோ கூடாது என்று நம் வீடுகளில் பெரியவர்கள் சொல்வதை கேட்டு இருப்போம். இதற்கு காரணம் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா?செவ்வாய் கிழமை என்பது துர்க்கை மற்றும் லட்சுமிக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது.

    செல்வத்தை வாரி வழங்கும் லட்சுமிக்கு உரிய நாள் செவ்வாய். இதன் காரணமாக இந்த நாளில் செல்வத்தை வீட்டை விட்டு வெளியேற்ற பெரியவர்கள் மறுத்து வருகிறார்கள். நம்மிடம் உள்ள லட்சுமியை தானம் செய்தால், லட்சுமி சென்று விடுவாள் என்ற நம்பிக்கை பண்டைய காலம் முதல் தொன்றுதொட்டு இருந்து வருகிறது.

    எப்படி முடி வெட்டவோ, ஷேவிங் செய்யவோ, நகம் வெட்டவோ கூடாதோ அதேப் போல் வீட்டை தண்ணீர் ஊற்றி கழுவி விடவோ அல்லது வீட்டில் உள்ள பழைய பொருட்களை தூக்கி எறியவோ மாட்டார்கள். இப்படி, செய்தால் வீட்டில் குடி கொண்டுள்ள லட்சுமி நம்மை விட்டு வெளியேறிவிடுவாள் என்ற நம்பிக்கை தான் முக்கிய காரணம்.

  • Tuesday Friday

    செவ்வாய் கிழமை முருகனுக்கும், வெள்ளிக் கிழமை லட்சுமிக்கும் உகந்த நாட்களாக கருதப்படுகிறது.

    எனவே இவ்விரு தினங்களிலுமே ஒரு சில விடயங்களை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியமாகும்.

    5 முகங்கள் கொண்ட குத்து விளக்கை ஏற்றி திருமகளை வழிபட வேண்டும்.
     
    சங்கு, நெல்லிக்காய், பசுவின் சாணம், தாமரைப் பூக்கள் ஆகியவற்றை வீட்டில் வைத்து பூஜை செய்ய வேண்டும்.

    அதிகாலை பிரம்ம முகூர்த்தத்திலே படுக்கையை விட்டு எழுந்துக் கொள்ள வேண்டும்.

    வீட்டில் வெள்ளி நிறப் புறாக்களை வளர்க்க வேண்டும்.

    செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் செய்யக் கூடாதவை?

    குத்து விளக்கை புஷ்பத்தினால் அணைக்க வேண்டும். அதை தவிர்த்து தானாகவும், ஊதியும் அணைக்கக் கூடாது.

    இரவு நேரத்தில் வீட்டை கூட்டினால் குப்பைகளை வெளியில் கொட்டக் கூடாது.

    ஈரத்துணி அணிந்துக் கொண்டும், ஈரமான தலையுடனும் பூஜை செய்யக் கூடாது.

    வாசல்படி, அம்மி, ஆட்டுக்கல், உரல் ஆகியவற்றில் உட்காரக் கூடாது.

    விளக்கு ஏற்றிய பின்பு பால், தயிர், உப்பு, ஊசி ஆகிய பொருட்களை பிறருக்கு கொடுக்கக் கூடாது.

    நம்முடைய வீட்டிற்குள் அல்லது வீட்டின் வெளியில் நகத்தை வெட்டக் கூடாது.
     

  • Tuesday do’s & dont’s

    செவ்வாய் கிழமையில் முடி வெட்டவோ, நகம் வெட்டவோ கூடாது என்று நம் வீட்டில் சொல்லக் கேட்டிருப்பீர்கள். செல்வம் போகும், துரதிஷ்டம் , நோய் கூடும் என சொல்லப்படுகிறது. இதற்கான காரணங்கள் என்ன என்று நிறைய பேருக்கு தெரியாது. ஆனால் அதனை கடைபிடிப்பார்கள். ஏன் செய்யக் கூடாது என்பதற்கான காரணத்தை இங்கே சொல்லப்பட்டுள்ளது. படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

    துர்கை மற்றும் லட்சுமி தினம்
    இந்தியாவின் பல பகுதிகளில் செவ்வாய் கிழமை புனித நாளாகக் கருதப்படுகிறது. ஏனென்றால் செவ்வாய் கிழமையானது துர்கை அம்மன் மற்றும் லட்சுமிக்கு உரிய நாளாக சொல்கிறோம்.

    செலவு கூடாது
    செல்வத்தை வாரி வழங்கும் லட்சுமிக்குரிய நாளான செவ்வாயில் யாருக்கும் கடனாகவோ, வேறெதற்காகவோ பணம் கொடுக்க விரும்ப மாட்டார்கள். மகாலட்சுமி நம்மை விட்டு போய்விடுவாள் என்ற நம்பிக்கை உண்டு. அதே சமயம் பண வரவை எதிர்பார்ப்பார்கள்.

    வீட்டை சுத்தம் செய்யமாட்டார்கள்
    எப்படி முடி வெட்டவோ, சவரம் செய்ய மற்றும் நகம் வெட்ட மாட்டார்களோ, அதே போல் இந்நாளில் வீட்டை தண்ணீர் ஊற்றி கழுவிடவோ அல்லது வீட்டில் உள்ள பொருட்களை தூக்கி எறியவோ மாட்டார்கள். இப்படி செய்தால், வீட்டில் குடி கொண்டுள்ள லட்சுமி நம் வீட்டை விட்டு சென்று விடுவாள் என்ற நம்பிக்கை.

    ஆயுள் குறைவு :
    செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டுவது, நகம் வெட்டுவது சவரம் சசெய்வதால் துரதிர்ஷ்டத்தை வழங்குவதொடடு.ஜோதிடத்தின் படி…இச்செயல்களை ஒருவர் மேற்கொண்டால், அவரது வாழ்நாளில் இருந்து 8 மாதங்கள் குறைவதாக சொல்லப்படுகிறது.

     ரத்த சம்பந்த நோய்கள் :
    மனித உடலில், செவ்வாய் இரத்தத்தில் குடியிருக்கிறார். இரத்தத்தில் இருந்து தான் முடி வளர்கிறது. எனவே செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்டினால், இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு உள்ளாகக்கூடுமாம்.

    செவ்வாய் கிரகத்தின் எதிர்மறை விளைவுகள்
    முடியின் நிறம் கருப்பு. நம் உடலின் முடியை சனி நிர்வகிக்கிறது. செவ்வாய் கிழமைகளில் செவ்வாய் ஆளுகிறது. உண்மையிலேயே சனி தான் செவ்வாயின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கிறது. ஒருவேளை செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்டினால், சனி கிரகத்தின் சக்தி குறைந்து, பின் செவ்வாயின் எதிர்மறை விளைவுகளுக்கு உள்ளாக நேரிடும். எனவே தான் செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்ட வேண்டாம் என்று சொல்கிறார்களாம்.