Tag: Tuesday

  • Is the broom Mahalakshmi…?

    வாஸ்து சாஸ்திரத்தில், வீட்டை சுத்தப்படுத்தப் பயன்படும் துடைப்பத்துக்கு முக்கிய இடமுண்டு. இது மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுவதால், துடைப்பத்தை மரியாதையுடன் கையாள்வது செல்வம், மகிழ்ச்சி, செழிப்பை வீட்டில் நிலைநிறுத்தும். துடைப்பம் வாங்கும் நாள், பயன்பாடு, பராமரிப்பு முதல் பழையவற்றை அகற்றுவது வரை குறிப்பிட்ட விதிமுறைகளைப் பின்பற்றுவது மகாலட்சுமியின் அருளைப் பெற உதவி புரியும்.

    துடைப்பம் வாங்கும் நாள்: செவ்வாய் அல்லது சனிக்கிழமைகள், குறிப்பாக தேய்பிறை நாட்களில், துடைப்பம் வாங்குவது மங்களகரமாகக் கருதப்படுகிறது. பவுர்ணமி முடிந்த பிறகு இந்நாட்களில் வாங்கினால், மகாலட்சுமியின் ஆசி கிடைக்கும். இது வீட்டில் பொருளாதார மேம்பாடு, செல்வ வளர்ச்சியை உறுதி செய்யும். புதிய துடைப்பத்தை கனவில் கண்டால், அது நல்ல அதிர்ஷ்டத்தின் அறிகுறியாகவும், வீட்டில் மகிழ்ச்சி, நிம்மதி நிலவுவதற்கான அடையாளமாகவும் வாஸ்து கூறுகிறது.

    பயன்பாட்டு விதிகள்: துடைப்பம் மகாலட்சுமியை மகிழ்விக்கும் பொருளாக இருப்பதால், அதை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வீட்டை பெருக்கும்போது முடிகள், தூசி சிக்கியிருந்தால், அவற்றை குப்பைத் தொட்டியில் போட்டு, துடைப்பத்தை சுத்தப்படுத்த வேண்டும். துடைப்பத்தை கால் படாத இடத்தில், மறைவாக வைக்க வேண்டும். பிறர் அதைப் பார்ப்பது செல்வத்துக்கு நல்லதல்ல. துடைப்பத்தை காலால் மிதிப்பது, ஒருவரை அதைக் கொண்டு அடிப்பது மகாலட்சுமியின் கோபத்தை வரவழைக்கும்.

    வீட்டை சுத்தப்படுத்திய பிறகு, துடைப்பத்தை தலைகீழாக வைப்பது தவறு. இது வீட்டில் சண்டை, பதற்றத்தை அதிகரிக்கும். எப்போதும் நேராக, சரியான இடத்தில் வைப்பது நேர்மறை சக்தியைப் பரப்பும். இரவில், குறிப்பாக சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு, விளக்கேற்றிய பின் வீடு பெருக்குவது மகாலட்சுமியின் அருளைக் குறைக்கும். மேலும், ஒருவர் வீட்டை விட்டு வெளியே சென்ற உடனே பெருக்குவதைத் தவிர்க்கவும்; ஒரு மணி நேரம் கழித்து பெருக்குவது நல்லது.

    பழைய துடைப்பத்தின் பயன்பாடு: பழைய துடைப்பத்தை வீட்டில் விட்டுவிட்டு புதிய வீட்டுக்கு செல்வது தவறு. இது மகாலட்சுமியை பழைய வீட்டிலேயே விட்டுவிடுவதாக அர்த்தம். பயன்படுத்திய துடைப்பத்தை தானமாகவோ, பிறர் பயன்படுத்தவோ கொடுக்கக் கூடாது. இயற்கையான துடைப்பங்கள் (எ.கா., தென்னங்குச்சி, பூந்துடைப்பம்) பயன்படுத்துவது சிறந்தது. இவற்றை வெட்ட வெளியில் எரித்து சாம்பலாக்கலாம். செவ்வாய், வெள்ளி நாட்களில் குப்பையில் போடுவதைத் தவிர்க்கவும். பறவைகள் துடைப்பக் குச்சிகளை கூடு கட்ட எடுத்தால், அது குடும்பத்துக்கு நற்பலனைத் தரும் என சாஸ்திரம் கூறுகிறது.

    மகாலட்சுமியின் மரியாதை: துடைப்பம் மற்றும் குப்பை அள்ளும் முறம் சுத்தத்தின் அடையாளங்கள். இவற்றை மரியாதையுடன் கையாள்வது மகாலட்சுமியை மகிழ்விக்கும். வீட்டை சுத்தமாக வைத்திருப்பது செல்வ தேவியின் அருளை நிலைநிறுத்தும். துடைப்பத்தை வாங்குவது, பயன்படுத்துவது, அகற்றுவது ஆகியவற்றில் வாஸ்து விதிகளைப் பின்பற்றுவது வீட்டில் நேர்மறை சக்தி, பொருளாதார வளர்ச்சி, மன நிம்மதியை உறுதி செய்யும்.

  • Steps to follow to maintain and grow wealth!

    செல்வம் நிலைத்து, விருத்தியடையவும், பணம் கொடுக்கல்-வாங்கல் சிறப்பாக அமையவும் சில முக்கிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். செவ்வாய்க்கிழமை, செவ்வாய் ஹோரையில் பணம் கொடுக்கல்-வாங்கல் நடப்பது உத்தமம். இதனால் கொடுப்பவருக்கு பணம் திரும்ப கிடைக்கும், வாங்குபவரால் பணத்தை திரும்ப கொடுக்க முடியும். பணத்தை திரும்ப கொடுப்பதும் செவ்வாய் ஹோரையில் நடப்பது சிறப்பு.

    பணம் கொடுக்கும்போது வாசல்படியில் நின்று கொடுக்கக்கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல்படிக்கு உள்ளே இருந்து கொடுக்க அல்லது வாங்க வேண்டும். வாசல்படி, உரல், ஆட்டுக்கல், அம்மிக்கல் ஆகியவற்றில் உட்காரவும் கூடாது. இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் ஆகியவற்றை அடுத்தவர்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்கக்கூடாது. வெற்றிலை, வாழையிலை ஆகியவற்றை வாடவிடவோ, வெற்றிலையை தரையில் வைக்கவோ, சுண்ணாம்பு வெற்றிலையை போடவோ கூடாது.

    எரியும் குத்து விளக்கை தானாக அணையவிடக்கூடாது, ஊதியும் அணைக்கக்கூடாது. புஷ்பத்தால் மட்டுமே அணைக்க வேண்டும். வீட்டில் யாரையும் ‘சனியனே’ என்றோ, ‘எழவு’ என்றோ திட்டக்கூடாது. அதிகமாக கிழிந்த துணிகளை உடுத்தவோ, உடுத்தியபடி தைக்கவோ கூடாது. உப்பையோ, அரிசி கழுவும்போது அரிசியையோ தரையில் சிந்தக்கூடாது.

    வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லட்சுமி கடாட்சம் பெருகும். நெல்லி மரம் விஷ்ணுவின் அம்சமாக திகழ்வதால், அதில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். நெல்லிக்கு ‘ஹரிபலம்’ என்ற பெயரும் உண்டு. லட்சுமி மற்றும் குபேரருக்கு உரிய மரமாக நெல்லி மரம் விளங்குகிறது. நெல்லி மரம் உள்ள வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும்.

    இந்த வழிமுறைகளை பின்பற்றினால், செல்வம் நிலைத்து, வாழ்வில் செழிப்பு பெருகும் என்பது நம்பிக்கை. சமூக வலைதளங்களில் இது குறித்து பலரும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து, இவற்றை பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

  • The vision of Garuda and its benefits!

    புராணங்களின் படி, கருடன் தரிசனம் ஆன்மீகத்தில் சிறந்த பலன்களை அளிக்கும் என்ற நம்பிக்கை தமிழக மக்கள் மத்தியில் பரவி வருகிறது. வாரத்தின் ஒவ்வொரு கிழமையும் கருடனை தரிசிப்பதால் கிடைக்கும் பலன்கள் குறித்த ஆர்வம் சமீப காலமாக அதிகரித்துள்ளது. இது பக்தர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை கருடனை தரிசித்தால் உடல்நலக் குறைவுகள் நீங்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். இதனால், பலர் ஞாயிறு அன்று கோவில்களில் பிரார்த்தனை செய்கின்றனர். திங்கட்கிழமை தரிசனம் குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி மற்றும் நலத்தை பெருக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. செவ்வாய்க்கிழமை கருடனை தரிசிப்பது துணிவையும், தன்னம்பிக்கையையும் அளிக்கும் என்று இளைஞர்கள் கருதுகின்றனர்.

    புதன்கிழமை தரிசனம் பகைவர்களின் தொல்லைகளை அகற்றும் என்று பலரும் நம்புகின்றனர். வியாழக்கிழமை கருடனை தரிசிப்பது நீண்ட ஆயுளை வழங்கும் என்று ஆன்மீக பெரியோர்கள் கூறுகின்றனர். வெள்ளிக்கிழமை தரிசனம் செல்வ வளத்தையும், லட்சுமி கடாட்சத்தையும் பெறுத்தரும் என்பதால், பக்தர்கள் இதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சனிக்கிழமை கருட தரிசனம் முக்தியை அளிக்கும் என்ற நம்பிக்கை மக்களை ஆன்மீக பாதையில் ஈர்க்கிறது.

    தமிழகத்தின் பல பெருமாள் கோவில்களில், குறிப்பாக திருநள்ளாறு, காஞ்சிபுரம், ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களில் கருடாழ்வார் சந்நிதியில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. சமூக வலைதளங்களில் இதுகுறித்த பதிவுகள் வைரலாகி, பக்தர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். ஆன்மீக விவாதங்களில், கருட தரிசனத்தின் முக்கியத்துவம் பற்றி பலர் விளக்கமளித்து, இதன் பலன்களை எடுத்துரைக்கின்றனர்.

     

  • August 13 2024 Aadi Tuesday

    ஆகஸ்ட் 13 – ஆடி செவ்வாய்
    குரோதி வருடம் – ஆடி 28
    ஆகஸ்ட் 13 – 2024
    செவ்வாய்
    நல்ல நேரம் : கா 7.31 – 9.00
    எமகண்டம் : கா 9.00 – 10.30
    குளிகை : ம 12.00 – 1.30
    ராகு : ம 3.00 – 4.30
    திதி : நவமி
    திதி நேரம் :  அஷ்டமி கா 6.11
    நட்சத்திரம் :  விசாகம் கா 8.29
    யோகம் : மரண-சித்த
    சந்திராஷ்டமம் : அசுவினி
    சூலம் : வடக்கு
    பரிகாரம் : பால்

     

  • Tuesday Viradham

    வருவாய் அதிகரிக்க வேண்டுமானால் செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும் என்று முன்னோர்கள் சொல்வார்கள். வாரத்தின் ஏழு நாட்களில் மூன்றாவது நாளாக இடம் பிடிப்பது செவ்வாய்க் கிழமை. 

    பொருளாதார நிறைவையும் வழங்குவது அங்காரகன்தான். அந்த அங்காரகனுக்குரிய தெய்வமாக விளங்குவது முருகப்பெருமான் மற்றும் சக்தி தேவி. முருகப் பெருமான், சக்தி தேவி, அம்பிகைக்கு உகந்த நாளான செவ்வாய் கிழமை இந்த தெய்வங் களை வணங்கினால் கவலைகள் அகலும். 

    செந்நிற ஆடை அணிந்து வழிபாட்டில் பங்கேற்பது; நைவேத்தியமாக அன்றை தினம் அங்காரகனுக்கு முக்கியத்துவம் உகந்த நாளாகும். தங்குதடை இல்லாத வாழக்கையும், தன்னிகரில்லாத அளவு புகழும், மங்கல வாய்ப்பு களையும், மாபெரும் சக்தியையும் பொங்கி வரும் உள்ளத்தில் தன்னம்பிக்கையையும், செந்நிற கனிவைத்து தீபாராதனை செய்ய வேண்டும்.

  • July 20 aadi Tuesday

    ஜூலை 20 – ஆடி செவ்வாய்
    பிலவ வருடம் – ஆடி 4
    20-ஜூலை-2021 செவ்வாய்  
    நல்ல நேரம்    :    7.30 – 9.00    
    ராகு    :    3.00 – 4.30    
    குளிகை    :    12.00 – 1.30
    எமகண்டம்    :    9.00 – 10.30                          
    திதி    :    ஏகாதசி          
    திதி நேரம்    :    ஏகாதசி    மா    5.22
    நட்சத்திரம்    :    அனுஷம்    இ    7.15
    யோகம்    :    சித்த யோகம்
    சந்திராஷ்டமம்    :    அசுவினி,பரணி
    சூலம்    :    வடக்கு
    பரிகாரம்    :    பால்
     

  • Mangalam pongul aadi Tuesday

    வாரா வாரம் தான் செவ்வாய் கிழமையும் , வெள்ளிக்கிழமையும் வருகிறது. ஆனால் ஆடி மற்றும் தை மாதங்களில்  வரும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளுக்கு மட்டும் ஏன் இத்தனை சிறப்பு?. ஆடி செவ்வாய் அன்று பெண்கள் விரதம் இருந்து அம்மனை வழிபட்டு வருவது ஏதோ நேற்று தோன்றிய வழக்கம் இல்லை. காலம் காலமாக நம் முன்னோர் ஆடி செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனின் அருள் பெற விரதமிருந்து வருவது வழக்கத்தில் உள்ளது. இவ்வளவு ஏன் அன்னை பராசக்தியே சிவனை அடையும் நோக்கில் இம்மாதத்தில் தான் விரதம் இருந்து இறைவனின் இடப்பாகத்தை பெற்று அர்த்தநாரீஸ்வரியாகும் வரம் பெற்றார். "ஆடிச் செவ்வாய் தேடிக்குளி" என்ற பழமொழி ஒன்றே இவ் விரதத்தின் சிறப்பை உணர்த்துவதாக உள்ளது.

     ஆடி செவ்வாய்க் கிழமைகளில் எண்ணெய் தேய்த்து, மஞ்சள் பூசி குளித்து, விரதம் இருந்து அம்மனை வழிபட்டால் மாங்கல்ய பாக்கியம் கூடும் என்பது  பெண்களின் நம்பிக்கை.

     மேலும் தமிழகத்தின் சில பகுதிகளில் ஆடி மாத செவ்வாயன்று பெண்கள் அவ்வையார் விரதம் இருப்பது வழக்கம். குறிப்பிட்ட நாளில் இரவு அனைவரும் தூங்கிய பின் விரதம் இருக்கும் பெண்கள் ஒன்று கூடி,  மூத்த சுமங்கலி பெண்கள்  வழிகாட்ட, இளம்தலைமுறைப்  பெண்கள் விரதத்தை தொடங்குவர்.

    பச்சரிசி மாவில் வெல்லம் சேர்த்து தயாரிக்கப்பட்ட  ஒருவித வடிவம் கொண்ட கொழுக்கட்டையை நைவேத்தியமாக  தயாரிப்பார்கள். மேலும் அன்றைய தினம் செய்யப்படும் நைவேத்தியங்கள் எதிலும் உப்பு சேர்க்க மாட்டார்கள்.

    அவ்வையார் அம்மனை நினைத்து விளக்கேற்றி செய்யப்படும் பூஜையில் அவ்வையாரின் கதையை ஒருவர் சொல்ல அனைவரும் அதை பக்தியுடன் கேட்டு, இறுதியில்  நைவேத்தியமாக செய்த பிரசாதங்களை பெண்களே உண்பார்கள். இதில் ஆண்களை மட்டுமின்றி, ஆண் குழந்தைகளைக் கூட   அனுமதிக்க மாட்டார்கள்.  பூஜை முடிந்தபின் வழிபாடு நடந்த இடத்தை சுத்தம் செய்துவிடுவார்கள்.இந்த விரதத்தை கடைபிடிப்பதால் குடும்ப ஒன்றுமை நிலைக்கும் என்றும் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடி , குழந்தை பாக்கியம் கிடைக்கும் எனவும்  நம்பப்படுகிறது.

     இதை தவிர ஆடிச்செவ்வாயில்  துர்க்கை, முருகனுக்கும் பெண்கள்  விரதம் இருப்பதுண்டு. செவ்வாய்க் கிழமைகளில் இராகு காலத்தில் மாலை 3 மணியில் இருந்து  4:30 மணிவரை உள்ள ராகு காலத்தில்  அம்பிகையை வழிபடுவது  விசேஷமாகும். 

     இந்த விரதத்தை அனுஷ்டிப்பதால்,விவாகமான பெண்கள் தம் கணவனின் குறையாத அன்பைப் பெற முடியும். மாங்கல்யம் நிலைத்து நிற்பதுடன்,  மணமாகாத பெண்கள்  நல்ல கணவன் கிடைக்கவும், விவாகத் தடைகள் நீங்கவும் வழி செய்யும் என்பது தொன்று தொட்டு இருந்து வரும் நம்பிக்கை.  

  • Tuesday good or bad day

    ஒரு சிலர் செவ்வாய்க் கிழமையை மங்களவாரம், அதனால் மங்களகரமான காரியங்களைச் செய்யலாம் என்று விவாதித்தாலும், நம்மவர்களுக்கு செவ்வாய் என்றாலே ஒருவித பய உணர்வு மனதில் தோன்றுகிறது. ‘செவ்வாயோ… வெறும் வாயோ…’ என்ற பழமொழியை கிராமப்புறங்களில் கேட்டிருப்போம். செவ்வாய்க் கிழமையில் பேச வேண்டாம், புதன்கிழமையில பேசுவோம் என்று முக்கியமான விவாதங்களையும் செவ்வாய்க்கிழமையில் தவிர்ப்பார்கள். 

    இவ்வாறு செவ்வாயைத் தவிர்ப்பதன் காரணத்தையும் ஜோதிடம் விளக்குகிறது. நவகிரகங்களில் சனி, ராகு, கேதுவிற்கு அடுத்தபடியாக தீய கிரகங்களில் ஒருவராக செவ்வாய் சித்தரிக்கப்படுகிறது. இயற்கையில் செவ்வாய் எஜமானரின் உத்தரவினை கண்மூடித்தனமாகப் பின்பற்றும் ஒரு தொண்டனாக, படைவீரனாக, காவல்காரனாக இருக்கும் குணத்தினைத் தரும். விஸ்வாசம் நிறைந்த பணியாள் என்றாலும் மூர்க்க குணம் தரும். எதைப்பற்றியும் கவலைப்படாது, சற்றும் யோசிக்காது மிகவும் வேகமாக செயல்படக்கூடிய தன்மையை செவ்வாய் தரும். 

    ஜோதிட ரீதியாக செவ்வாயின் குணம் இதுவென்றால், சாஸ்திரம் செவ்வாய்கிழமையைப் பற்றி என்ன சொல்கிறது என்பதையும் தெரிந்துகொள்வோம். தர்ம சாஸ்திரத்தில் மௌன அங்காரக விரதம் என்று ஒரு விரதத்தினைப் பற்றி மிகவும் விசேஷமாகக் கூறப்பட்டுள்ளது.

    அதாவது செவ்வாய்க்கிழமை நாளன்று மௌனவிரதம் அனுஷ்டித்தால் ஒரு யாகம் செய்த பலன் கிடைக்கும் என்கிறது சாஸ்திரம். செவ்வாயில் எந்த ஒரு விஷயத்தையும் அசைபோடாது வெறுமனே வாயை மூடிக் கொண்டிருப்பதால் சிரமங்கள் ஏதும் நேராது. 

    இன்னும் சற்று விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் செவ்வாய்க்கிழமை அன்று எந்த ஒரு தர்க்கத்திலும் ஈடுபடக்கூடாது, அவ்வாறு தர்க்கம் செய்வதாலோ, விவாதத்தில் ஈடுபடுவதாலோ தீமையே உண்டாகும். தற்காலத்தில் கூட தங்களது பேச்சுத் திறமையின் (கேன்வாசிங்) மூலம் வாடிக்கையாளரைக் கவரும் தொழில் செய்யும் பெரிய நிறுவனங்கள் கூட (ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், நகைக்கடை போன்றவை) செவ்வாய்கிழமை அன்று விடுமுறை விட்டுவிடுவதைக் காணலாம். செவ்வாய்க்கிழமையில் பொதுமக்களோடு பேசுவதன் மூலம் பரஸ்பரம் ஒரு சுமுக உறவு உண்டாகாது என்பது அவர்களது அனுபவத்தில் கிடைத்த பாடமாக இருக்கிறது. 

    அதனாலேயே திருமண சம்பந்தம் பேசச் செல்பவர்கள் கூட செவ்வாய் மங்களவாரமாக இருந்தாலும் அதனைத் தவிர்க்கிறார்கள். ‘செவ்வாயோ.. வெறும் வாயோ…’ என்ற பழமொழியை நம்மவர்கள் அனுபவித்துத்தான் சொல்லியிருக்கிறார்கள். அதனால் தர்மசாஸ்திர வாக்கியப்படி செவ்வாய்க்கிழமையில் மௌன விரதம் இருக்க முயற்சிப்போம். இயலாவிட்டால் வீண் விவாதத்தினையாவது தவிர்ப்போம். நன்மை காண்போம். அதேநேரத்தில் செவ்வாய் தோஷத்திற்கான பரிகார சாந்தி, துர்கா ஹோமம் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தின் அடிப்படையில் செய்யும் ஆயுஷ்ய ஹோமம், சஷ்டி அப்த பூர்த்தி ஆகியவற்றை செவ்வாய்கிழமையில் செய்யலாம்.
     

  • Tuesday Viradham

    வாழ்க்கையில் வளம் பெற வேண்டும் என்றால் செவ்வாய் கிழமைகளில் விரதம் இருக்க வேண்டும் என்பது முன்னோர்களின் வாக்கு. 

    வாரத்தின் மூன்றாவது நாள் செவ்வாய்க்கிழமை. செவ்வாய் கிழமைக்கு உகந்த அங்காரகனுக்குரிய தெய்வமாக விளங்குவது முருகப்பெருமான் மற்றும் சக்தி தேவி. முருகப்பெருமான், சக்தி தேவி, அம்பிகைக்கு உகந்த நாளான செவ்வாய்கிழமை இந்த தெய்வங்களை வணங்கினால் கவலைகள் அகலும். 

     கார்த்திகை நட்சத்திரம் அல்லது விசாக நட்சத்திரம் அல்லது விசாக நட்சத்திரம் அமைந்த செவ்வாய்க்கிழமை விரதத்திற்கு பலன் அதிகம் உண்டு. வேலை வணங்குவதே வேலை எனச் சொல்லி வீட்டில் வேல் வழிபாடும் செய்யலாம். 

    வீட்டு பூஜையறையின் நடுவில் வேல் வைத்து இருபுறமும் இரு விளக்குகள் வைத்து ஒரு விளக்கில் மூன்று திரிகளும், மற்றொரு விளக்கில் மூன்று திரிகளும் ஆக ஆறு தீபமிட்டு ஆறுமுகற வழி செய்து வந்தால், சீரும் சிறப்பும் வந்து சேரும். இந்த விரதத்தை மேற்கொள்ளும்போது, முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் உள்ள படம் வழிபட வேண்டும்.

    முன்னதாக விநாயகர் படத்தையும் வைத்து வழிபட வேண்டும். அன்னதான பிரியர் முருகன் என்பதால், செவ்வாய்கிழமை அன்னதானம் வழங்கினால் முருகனின் முழு அருளுக்கு பாத்திரமாகலாம். செவ்வாய்கிழமை பிறந்தவர்களும், மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள். ரத்த சம்பந்தமான நோய் இருப்பவர்கள், ஒன்பது வாரம் இல்லத்தில் விரதம் இருந்து 10 வது வாரம் பலன் தரும் பரிகார தலத்திற்கு சென்று வழிபட்டால், நிலைமை சீராகும். வாழ்வு சிறக்கும்.
     

  • Tuesday sangadahara chadurthi viradham

    கஜாநநம் பூத கணாதி
    ஸேவிதம் கபித்தஜம்பூபல
    ஸாரபக்ஷிதம்
    உமாஸுதம் சோக விநாச
    காரணம் நமாமி விக்நேச்வர
    பாதபங்கஜம

    பிள்ளையார், விக்னேசுவரர், கணேசர், கணபதி, கணாதிபர், ஐங்கரன், ஏரம்பன், இலம்போதரர், குகாக்கிரசர், கந்தபூர்வசர், மூத்தோன், ஒற்றைமருப்பினன், மூஷிகவாகனன், வேழமுகன், கயமுகன், ஓங்காரன், பிரணவன் போன்ற இன்னும் பல நாமங்கள் விநாயகருக்கு வழக்கிலுள்ளன. இவற்றுள் 'விநாயகர்' என்பது 'மேலான தலைவர்' என அர்த்தப்படும். விமேலான: நாயகர் தலைவர் தனக்கு மேலாக ஒருவர் இல்லாதவர் எனப் பொருள்படும். அதுபோலவே 'விக்னேஸ்வரர்' என்றால் 'இடையூறுகளை நீக்குபவர்' என்றும், 'ஐங்கரன்' என்றால் (தும்பிக்கையுடன் சேர்த்து) ஐந்து கரங்களை உடையவரெனவும்' அர்த்தப்படும். 'கணபதி' என்பது கணங்களுக்கு அதிபதி என்று பொருள்படும். இவ்வாறே அவரது சகல நாமங்களுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் அந்தந்தப் பெயர்களிலேயே பொதிந்துள்ளன.

    செவ்வாய் கிழமை வரும் சங்கட ஹர சதுர்த்தி மற்றும் மஹா சதுர்த்தி விரதம் இருக்க மிகவும் விசேஷம் உண்டு.ஆனைமுகத்தோன் ஆறுமுகனின் அண்ணன் கணபதி பிறந்த தினம் சுக்கிலபட்ச சதுர்த்தி! அது விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுவதை அனைவரும் அறிவீர்கள். மாதத்தில் மற்றுமோர் சதுர்த்தி உண்டு. அது கிருஷ்ணபட்சத்தில் வரும் சதுர்த்தி. அதுவே சங்கடஹர சதுர்த்தி என்று சொல்லப்படுகிறது. விநாயகர் எளிமையானவர். ஆற்றங்கரைகளில் அரச மரத்தடியில் கூட எழுந்தருளி அருள் பாலிப்பவர்.

    ஆனை முகனை நினைத்து மஞ்சளில் பிடித்து வைக்கலாம்! மண்ணிலே பிடித்து வைக்கலாம். எளிதாக கிடைக்கும் எருக்கம் பூ அருகம்புல் அவருக்கு பிடித்தமான பத்திரங்கள். இவரின் அருளை எளிமையாக பெற்றிட சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பது சிறப்பாகும்.