Tag: Sabarimalai

  • Sabarimalai Iyappan Koil Thirappu

    சபரிமலை ஐயப்பன் கோயில் வரும் 9 ஆம் தேதி பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்பட உள்ளது. 

    கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து கடந்த மார்ச் 20 ஆம் தேதி முதல் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் வழக்கமான பூஜைகள் தேவஸ்தானம் சார்பில் செய்யப்பட்டு வந்தன.

    இந்நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் 8-ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க மத்திய அரசு அனுமதித்து அதற்கன வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டது.

    இதனையடுத்து வரும் 9 ஆம் தேதி முதல் கேரளாவில் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

    கோயில்களின் அளவைப்பொறுத்து பக்கதர்களை அனுமதிப்பது தொடர்பாக கோயில் நிர்வாகம் முடிவு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுளள்து. அதாவது 100 சதுர மீட்டருக்கு 15 நபர்கள் மட்டுமே 6 அடி இடைவெளியுடன் நிற்க வேண்டும். அதிகபட்சமாக 100 பக்தர்கள் மேல் கோயில் வளாகத்துக்குள் யாரையும் அனுமதிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஒரே நேரத்தில் 50 பக்தர்கள் மேல் அனுமதி்க்கப்படமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • Sabarimalai nadai thirappu

    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை  வைகாசி மாத பூஜைக்காக வரும் 14-ந் தேதி திறக்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் தொடக்கத்தில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். அதன்படி, வைகாசி மாத பூஜைக்காக வருகிற 14-ந் தேதி கோவில் நடை திறக்கப்படுகிறது. 

    15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை பூஜைகள் நடைபெறும். தினமும் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு காலை 10 மணிக்கு அடைக்கப்படும். பின்னர் மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 7.30 மணிக்கு அடைக்கப்படும்.

     இந்த நாட்களில் சிறப்பு பூஜைகளான உதயஸ்தமன பூஜை, நெய்யபிஷேகம், களபாபிஷேகம், புஷ்பாபிஷேகம், படி பூஜை போன்றவை நடைபெறும். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊடரங்கு அமல் படுத்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் நேரடியாக சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆன்லைன் மூலம் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • Sabarimalai Nadai Thirappu

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக நேற்று நடை திறக்கப்பட்டது. நேற்று மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சுவாமி ஐயப்பனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டபிறகு நிர்மால்ய தரிசனம், நெய் அபிஷேகம் உள்பட விசே‌ஷ பூஜைகள் நடைபெற்றது. ஐயப்பனை தரிசனம் செய்ய பக்தர்கள் ஏராளமானோர் குவிந்துள்ளனர். நீண்ட வரிசையில் காத் திருந்து அவர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    சபரிமலையில் உள்ள புனித நதியான பம்பை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் பக்தர்கள் பாதுகாப்பாக நீராடும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர். அந்த பகுதியில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    வருகிற 22-ந்தேதி வரை கோவில் நடை திறந் திருக்கும். அன்று இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும். சித்திரை திருநாள் ஆட்ட திருவிழாவையொட்டி மீண்டும் வருகிற 26-ந்தேதி மாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். 27-ந்தேதி விசே‌ஷ பூஜைகளுக்கு பிறகு அன்று இரவு நடை அடைக்கப்படும்.

    அதைத்தொடர்ந்து பிரசித்திபெற்ற மண்டல பூஜைக்காக அடுத்த மாதம் 16-ந்தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்படும்.

  • Magara Jothi Dharisanam

    சுவாமியே சரணம் ஐயப்பா என்று சரண கோஷம் முழங்க சபரிமலை ஐயப்பன் கோவிலில் லட்சக்கண்க்கான பக்தர்கள் மகரஜோதி தரிசனம் செய்துள்ளனர். 

     கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மகர விளக்கு பெருவிழா நடைபெற்றது. முன்னதாக பந்தளம் பகுதியில் இருந்து திருவாபரண பவனி, மாலை சரங்குத்தி வந்து சேர்ந்தது. இதையடுத்து ஐயப்பனுக்கு ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டன. 

    பின்னர் பக்தர்களுக்காக நடை திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சில நிமிடங்களில் பொன்னம்பலமேட்டில் மகர நட்சத்திரம் காட்சி தந்தது. 

    இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தியுடன் வணங்கினர். மாலை 6.40 மணியளவில் மகர ஜோதி 3 முறை காட்சி தந்தது. 

    பக்தர்கள் சரண கோஷம் முழங்க மகரஜோதியை வழிபட்டனர். வரும் 20-ம் தேதி வரை, ஐயப்பன் கோவிலில் படி பூஜைகள் நடைபெறும். 

    இதையடுத்து, பந்தளம் கொட்டார ராஜ தரிசனத்திற்கு பின்னர் கோவிலின் நடை அடைக்கப்படும்.